search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - புதிதாக 1472 பேருக்கு பாதிப்பு
    X

    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - புதிதாக 1472 பேருக்கு பாதிப்பு

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது.
    • தமிழகத்தில் நேற்று 1,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

    தமிழகத்தில் புதிதாக 1,472- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து 344- ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 691 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை.

    தொற்று பரவலைக் கண்டறிய இன்று 25,821 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மேலும் 624- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×