search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேச்சேரி அருகே  மனைவி இறந்த துக்கத்தில்   கணவன் விஷம் குடித்து தற்கொலை
    X

    மேச்சேரி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவன் விஷம் குடித்து தற்கொலை

    • குப்புசாமி (வயது 60). இவருக்கு குப்புதாயி, அமிர்தவல்லி என்று 2 மனைவிகள் உள்ளனர்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவி அமிர்தவல்லி இறந்து போனதால் சோகத்தில் விஷம் குடித்து குடித்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள நரியனூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவருக்கு குப்புதாயி, அமிர்தவல்லி என்று 2 மனைவிகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவி அமிர்தவல்லி இறந்து போனதால் சோகத்தில் இருந்த குப்புசாமி கடந்த 3-ம் தேதி இரவு தனது வீட்டில் ைவத்து விஷம் குடித்து குடித்தார்.

    விஷம் உடல் முழுவதும் பரவியதால் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்தார். அதனை கண்ட அவரது உறவினர்கள் குப்புசாமியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் . அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குப்புசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவி இறந்த துக்கத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×