search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பைநல்லூர் அருகே  போலீஸ் விசாரணைக்கு பயந்து  வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கம்பைநல்லூர் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    • கூப்பிடும்போது மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.
    • வீட்டுக்கு வந்த சுபாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகேயுள்ள தேவரெட்டியூர் பகுதியாய் சேர்ந்தவர் சுபாஷ்(வயது 24). லாரி டிரைவர்.

    இவரும் ,இவரது நண்பர்களுமான சென்னமூர்த்தி, பாபு, சதீஷ், ராமராஜன் ஆகியோர் இருமத்தூர் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்.

    இதில் சென்னமூர்த்தி நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னமூர்த்தியின் சாவு குறித்து சுபாஷ் உள்ளிட்ட நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும், கூப்பிடும்போது மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் விசாரணைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த சுபாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×