என் மலர்
நாமக்கல்
- தவெக தலைவர் இன்று இரண்டு இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
- திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாவ நாமக்கல் செல்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதலில் நாமக்கலில் சேலம் சாலையில் உளள் கே.எஸ். தியேட்டர் அருகே, மக்களை சந்தித்து பிராசரம் செய்கிறார். இதற்காக அவர் திருச்சியில் இருந்து நாமக்கலுக்கு சாலை வழியாக வந்து கொண்டிருக்கிறார். நாமக்கலில் அவர் பேசும் இடத்தில் அதிக அளவிலான தொண்டர்கள் கூடியுள்ளனர்.
இந்த கூட்டத்திற்கு நடுவே, திடீரென ஆம்புலன்ஸ் வேன் ஒன்று வந்தது. உடனே தொண்டர்களை, ஆம்புலன்ஸ் தடையின்றி விரைவாக செல்ல வழிகள் ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனால் ஆம்புலன்ஸ் தொண்டர்களை கூட்டத்தை அழகாக கடந்து சென்றது.
விஜய்க்கு வரும் வழியில் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ஒரு தொணடர் திரிசூலம் வழங்கினார். அதை விஜய் ற்றக் கொண்டார்.
- ராசிபுரம் ஆண்டகளூர் கேட் மற்றும் பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- போலீசாரின் அனுமதி கிடைக்கும் என்றும், அதன்பிறகு இந்த பிரசாரத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து தெரியவரும் எனவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 13-ந் தேதி திருச்சி, அரியலூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் முதல்முறையாக தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் இன்று நாகை, திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் வருகிற 27-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு மனு கொடுக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு அவர்கள் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு கடிதத்தை வழங்கினர்.
குறிப்பாக நாமக்கல் மாநகரில் அவர் பிரசாரம் மேற்கொள்ள 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதாவது, சேலம் சாலையில் உள்ள கே.எஸ். தியேட்டர், பொய்யேரிகரை மதுரை வீரன் கோவில், பூங்கா சாலை என 3 இடங்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல ராசிபுரம் ஆண்டகளூர் கேட் மற்றும் பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில் போலீசாரின் அனுமதி கிடைக்கும் என்றும், அதன்பிறகு இந்த பிரசாரத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து தெரியவரும் எனவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வருகிற 27-ந் தேதியே விஜய் நாமக்கல்லுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- திடீரென லிப்ட் சரிந்து அருகில் சென்று கொண்டு இருந்த மின்வயரில் மோதி நின்றது.
- நாமக்கல் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (46), ஜோதி (45). பெயிண்டிங் தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் இன்று காலை நாமக்கல்-திருச்சி ரோடு நாகராஜபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இதற்காக இவர்கள் 2 பேரும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த லிப்ட் மீது நின்று பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அந்த லிப்ட் சரிந்து அருகில் சென்று கொண்டு இருந்த மின்வயரில் மோதி நின்றது. இதில் லிப்டில் நின்று வேலைசெய்து கொண்டு இருந்த சிவக்குமார், ஜோதி ஆகிய 2 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அவர்களின் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து மின்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் நாமக்கல் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தது.
- அமெரிக்காவில் ஒரு முட்டை ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் தினமும் சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர அரபு நாடுகளுக்கு தினமும் 80 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு கடந்த ஜூன் மாதம் இறுதியில் முதன் முதலாக கப்பலில் 1.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தது. இதையடுத்து நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. இதனால் 1.20 கோடி முட்டைகள் அனுப்ப முடியாத நிலை உருவாகி உள்ளது.
நாமக்கல்லில் இருந்து ஒரு முட்டையை ரூ.4.50க்கு கொள்முதல் செய்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல ஒரு முட்டைக்கு ரூ.7.50 செலவாகிறது. இதையடுத்து அமெரிக்காவில் ஒரு முட்டை ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல்லில் இருந்து முட்டைகள் அனுப்ப முடியாததால் அமெரிக்காவில் ரூ.20 கோடி மதிப்பிலான முட்டை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முட்டை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், தினசரி நாமக்கல் மண்டலத்தில் இருந்து 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். இதில் ஒருமுறை மட்டும் அமெரிக்காவுக்கு அனுப்பிய 1 கோடியே 20 லட்சம் முட்டைகள் பெரிய விஷயமல்ல. இந்த முட்டைகளை இந்தியாவிலேயே வேறு பகுதியில் விற்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இதனால் முட்டைகள் பெரிய அளவில் தேக்கம் அடையாது.
- 3 மகள்களை கொன்று விட்டு தந்தை கோவிந்தராஜ் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
- வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மகள்களை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா திம்மநாயக்கன்பட்டியை அடுத்த சிங்கிலியன் கோம்பை அருகே உள்ளது வேம்பாகவுண்டன்புதூர். இந்த பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40), ரிக் வண்டி தொழிலாளி. இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு பிரித்திகாஸ்ரீ (8), ரித்திகா ஸ்ரீ (6), தேவ ஸ்ரீ (5) ஆகிய 3 பெண் குழந்தைகளும், அனீஸ்வரன் (1½) என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
கோவிந்தராஜ் கடந்த 8 மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரிக் லாரி வாங்குவதற்காக ரூ.14 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. ஆனால் அந்த பணத்தை வைத்து அவர் வீடு கட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தொழில் செய்ய முடியாமல் கோவிந்தராஜ் இருந்து வந்தார். மேலும் கடனை அடைக்க கேரள மாநிலத்திற்கு கூலி வேலைக்கு சென்று வந்தார்.
அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து தனியார் நிதி நிறுவனத்திற்கு 7 மாதங்களாக தலா ரூ.27 ஆயிரம் வீதம் மாதத் தவணையை செலுத்தி வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து கோவிந்தராஜ் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.
இங்கு வேலை இல்லாமல் கோவிந்தராஜ் இருந்து வந்தார். இதனால் மாத தவணை செலுத்துவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோர் சாப்பிட்டு முடித்தவுடன் தூங்க சென்றனர். அப்போது படுக்கை அறையில் கோவிந்தராஜின் மனைவி பாரதி தனது 1½ வயது ஆண் குழந்தை அனீஸ்வரனுடன் தூங்க சென்றார். வீட்டின் ஹாலில் கோவிந்தராஜ் மற்றும் 3 மகள்களும் தூங்கினர். இன்று அதிகாலை 3 மணியளவில் எழுந்த கோவிந்தராஜ், மனைவி மற்றும் மகன் தூங்கி கொண்டிருந்த படுக்கை அறையின் கதவை வெளிப்புறமாக தாழ் போட்டார்.
பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ஹாலில் தூங்கி கொண்டிருந்த மகள்கள் பிரித்திகா ஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ, தேவ ஸ்ரீ ஆகிய 3 பேரையும் கொடூரமாக வெட்டினார். தூக்கத்தில் இருந்த குழந்தைகள் திடீரென எழுந்து கதறி துடித்தனர். குழந்தைகள் அழும் சத்தம் கேட்டதும் படுக்கை அறையில் இருந்த பாரதி அலறியடித்துக் கொண்டு வெளியே வர முயன்றார். அப்போது வெளிப்புறமாக கதவு தாழிடப்பட்டு இருந்ததால் அவரால் வர முடியவில்லை.
இந்த நேரத்தில் கோவிந்தராஜ் துடிக்க துடிக்க 3 குழந்தைகளையும் அரிவாளால் வெட்டினார். இதில் தலை துண்டிக்கப்பட்டு 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். பின்னர் கோவிந்தராஜ் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பாரதியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இவர்களது வீட்டிற்கு ஓடி வந்தனர். அப்போது குழந்தைகள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததையும், விஷம் குடித்த நிலையில் கோவிந்தராஜ் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பாரதி மற்றும் அவரது 1½ வயது மகனையும் அவர்கள் மீட்டனர். வீட்டின் படுக்கை அறையில் பாரதி தனது 1½ வயது மகனுடன் படுத்து தூங்கியதால் அவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து உடனடியாக மங்களபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் மங்களபுரம் போலீசார் விரைந்து வந்தனர்.
மேலும் கொலை நடந்த வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்ட 3 பெண் குழந்தைகள் மற்றும் தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனையில் கோவிந்தராஜ் 3 மகள்களையும் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலி ஆவணங்கள், போலி முகவரி கொடுத்து சிறுநீரக மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
- பள்ளிபாளையம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பணத்துக்காக சிறுநீரகம் எடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இவர்களின் வறுமையை தெரிந்து கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் வெளியே தெரியவந்ததும் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து சிறுநீரக மோசடியில் தொடர்புடைய புரோக்கர்கள், டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆஸ்பத்திரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சனை ஓய்ந்து இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிபாளையத்தை சேர்ந்த ஒரு பெண் தனது சிறுநீரகத்தை ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக பகீர் தகவலை வெளியிட்டார்.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் கவுசல்யா என்பது தெரியவந்தது. மேலும் அவர் புரோக்கர் ஆனந்தன் என்பவர் மூலம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரகம் எடுக்கப்பட்டதாகவும், அதற்காக தனக்கு ரூ.6 லட்சம் தந்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த விஜயா என்ற பெண்ணும் தனது சிறுநீரகத்தை ரூ.6 லட்சத்துக்கு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் திருச்சி, பெரம்பலூரில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்று ஆய்வு செய்தனர். அதில் திருச்சி ஆஸ்பத்திரியில் நடத்திய சோதனையில் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 6 பெண்களின் சிறுநீரகம் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த முகவரிக்கு வந்து ஆய்வு செய்த போது அது போலியானது என்று தெரியவந்தது.
எனவே போலி ஆவணங்கள், போலி முகவரி கொடுத்து இந்த சிறுநீரக மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. எனவே இவர்களை அழைத்து சென்ற புரோக்கர் ஆனந்தன் என்பவரை தேடி சென்ற போது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
பள்ளிபாளையம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பணத்துக்காக சிறுநீரகம் எடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விவகாரம் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. வழக்கமாக ஒருவர் சிறுநீரகம் தானம் செய்ய வேண்டும் என்றால் அவரிடம் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்பார்கள். அதற்கு ஏற்றாற் போல் சிறுநீரகம் கொடுக்கும் பெண்களை புரோக்கர்கள் தயார் செய்துஅழைத்து சென்று உள்ளனர்.
பள்ளிபாளையம் பகுதியில் இதுவரை ஏராளமான பெண்களிடம் சிறுநீரகம் எடுத்து மோசடி நடந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறையினரும், போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். புரோக்கர் ஆனந்தன் பிடிபட்டால் தான் எத்தனை பேரிடம் சிறுநீரகம் எடுக்கப்பட்டது என்ற முழுவிபரமும் தெரியவரும்.
இதற்கிடையே திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின் திட்ட இயக்குனர் வினீத், மருத்துவ சட்ட துணை இயக்குனர் மீனாட்சி சுந்தரேசன், மருத்துவ சட்ட பிரிவு டி.எஸ்.பி. சீத்தாராமன் மற்றும் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் கைப்பற்றப்பட்ட போலி ஆவணங்களில் கையெழுத்து போட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் திருச்சி, பெரம்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிந்ததும் அவர்கள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
- விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
திருச்செங்கோடு:
திருச்சி அரியமங்கலத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மாசி பெரியண்ணசாமி கோவிலில் சாமி கும்பிட 5 பேர் ஒரு காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு திருச்செங்கோட்டில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க வந்தனர்.
திருச்செங்கோட்டில் நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் திருச்சி அரியமங்கலத்துக்கு புறப்பட்டனர். இரவு 8 மணியளவில் கார் திருச்செங்கோடு உஞ்சனை அருகே சென்றது.
அப்போது காரை ஓட்டிவந்த யுவராஜன் என்பவர் தூங்கி உள்ளார். இதனால் நிலை தடுமாறிய கார் பஸ் நிறுத்தம் அருகே இருந்த தள்ளுவண்டி கடை மீது மோதியது. மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட் மீதும் மோதி இழுத்து சென்றது.
பின்னர் இந்த பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த முருகேசன் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு கார் வீட்டுக்குள் நுழைந்தது. அப்போது வீட்டுக்கு முன்பு அமர்ந்திருந்த முருகேசன் (67) என்பவர் மீது கார் மோதி நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே நாற்காலியில் அமர்ந்தபடி முருகேசன் பலியானார்.
இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் கார் டிரைவர் யுவராஜன் மற்றும் காரில் பயணித்த சரவணன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். பின்பக்கம் அமர்ந்திருந்த 3 பேர் காயமின்றி தப்பினர்.
இதுபற்றி தெரிய வந்ததும் திருச்செங்கோடு ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான முருகேசன் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ஆட்சியர் பள்ளிக்கு சென்று, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பறையில் அவரை சந்தித்து கலந்துரையாடினார்.
- மாணவன், ஆட்சியரிடம் போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்? என கேட்டான்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் விஜய், ஆட்சியர் துர்காமூர்த்திக்கு கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார்.
அதில் 'வாட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்பட்ட குறுஞ்செய்தி மூலம் ஆட்சியர் பணிக்கு நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிந்தேன். எனவே தாங்கள் எங்களது பள்ளிக்கு வரவேண்டும்' என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
அந்த மாணவரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நேற்று எருமப்பட்டி பேரூராட்சியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஆட்சியர், அங்குள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பறையில் அவரை சந்தித்து கலந்துரையாடினார்.
ஆட்சியர் துர்காமூர்த்தி, மாணவன் எழுதிய கடிதத்தை படித்தபோது கண்கலங்கினார்.
மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப்போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் என்று மாணவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை வாசித்த அவர், மாணவனை பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
அப்போது மாணவன், ஆட்சியரிடம் போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்? என கேட்டான். அதற்கு ஆட்சியர், ஆங்கிலத்தில் எழுதினேன் என்றார்.
உடனே ஏன் தமிழில் எழுத முடியாதா? என மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆட்சியர், 'தாராளமாக தமிழில், நமது தாய்மொழியில் எழுதலாம். இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு பெற்றவர்கள், பலர் தங்கள் தாய்மொழியில் எழுதி உள்ளார்கள். அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர்' என்றார். இவ்வாறு மாணவர் மற்றும் ஆட்சியர் இடையே கலந்துரையாடல் சுவாரசியமாக நடந்தது.
தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர், நீங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு சாதனையாளர்களாக வரவேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மேலும் தன்னை பள்ளிக்கு அழைத்த மாணவருக்கு ஆட்சியர் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியும் பாராட்டினார்.
- திருமணத்திற்காக புரோக்கர்களுக்கு ரூ.1 லட்சமும், மணமகள் தீபாவுக்கு வரதட்சணையாக ரூ.1 லட்சமும் சிவசண்முகம் கொடுத்துள்ளார்.
- திருமணம் நடந்து 2 நாளில் வீட்டைவிட்டு ஓடிய தீபா பல ஆண்களை இதுபோன்று திருமணம் செய்து கொண்டு மோசடி செய்யும் கல்யாண ராணியா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசண்முகம்(35). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி அந்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் சிவசண்முகம் மதுரையை சேர்ந்த திருமண புரோக்கர்கள் மூலம் 2-வது திருமணத்திற்கு பெண் தேடி கொண்டிருந்தார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் தீபா (30) என்ற பெண்ணை கடந்த 7-ந்தேதியன்று மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள கோவிலில் சிவசண்முகம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது சிவசண்முகத்தின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். மணமகள் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இந்த திருமணத்திற்காக புரோக்கர்களுக்கு ரூ.1 லட்சமும், மணமகள் தீபாவுக்கு வரதட்சணையாக ரூ.1 லட்சமும் சிவசண்முகம் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து சிவசண்முகம் மணமகள் தீபாவை அழைத்து கொண்டு குடும்பத்தினருடன் வடகரையாத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில் திருமணமான 2-வது நாளான கடந்த 8-ந்தேதி திடுமல் ராசாம்பாளையத்தில் உள்ள தனது அக்கா மலர்கொடியின் வீட்டிற்கு சிவசண்முகம் தீபாவை விருந்துக்கு அழைத்துச் சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சிவசண்முகத்தின் அக்கா வீட்டிலிருந்த தீபாவை காணவில்லை. இதையடுத்து சிவசண்முகம் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் புரோக்கர்கள் மற்றும் தீபாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவசண்முகம் விரக்தியில் இருந்தார். இந்நிலையில் ராசபாளையத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் கடந்த 10-ந் தேதி மாலை தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசண்முகத்தின் அக்காள் மலர்க்கொடி பார்த்து கதறி அழுதார். பின்னர் உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து சிவசண்முகத்தின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவசண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிவசண்முகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்தினார்.
போலீசாரின் விசாரணையில் வீட்டை விட்டு வெளியே சென்ற தீபா திருமணத்திற்கு எடுத்த பட்டுப்புடவை, 9 பவுன் தங்க தாலி கொடியுடன் தலைமறைவானது தெரியவந்தது. மேலும் தலைமறைவான புதுப்பெண் தீபா மற்றும் பெண் உள்பட 6 புரோக்கர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் திருமணம் நடந்து 2 நாளில் வீட்டைவிட்டு ஓடிய தீபா பல ஆண்களை இதுபோன்று திருமணம் செய்து கொண்டு மோசடி செய்யும் கல்யாண ராணியா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்வி, சுகாதாரம், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் திட்டங்களின் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
- மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நாமக்கல்:
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நாமக்கல்லுக்கு வந்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். கல்வி, சுகாதாரம், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் திட்டங்களின் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராேஜந்திரன், மதிவேந்தன், கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.பி.க்கள் ராேஜஸ் குமார், மாதேஸ்வரன், பிரகாஷ், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் 139 பணிகளுக்கு ரூ.87 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டியும், ரூ.10 கோடியே 80 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 36 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை துறைகளின் சார்பில் 2,001 பேருக்கு ரூ.33 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அவர் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதற்கட்டமாக இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
மாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன விளையாட்டு உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்து, நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் செய்துள்ளனர்.
துணை முதலமைச்சர் நாமக்கல் வருகையையொட்டி கரூர்-நாமக்கல் சாலையின் இருபுறமும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. துணை முதலமைச்சா் பங்கேற்க கூடிய விழா மேடைகள் முழுவதும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் இருந்து நாமக்கல் சுற்றுலா மாளிகை வரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- அரசு நலத்திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.131 கோடியே 36 லட்சம் ஆகும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 6 மணி அளவில் கரூரில் இருந்து நாமக்கல் வருகை தர உள்ளார்.
அவருக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட எல்லையான ராசாம்பாளையம் சுங்கசாவடி அருகில் மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் துர்காமூர்த்தி சிறப்பான வரவேற்பு அளிக்கிறார். அதே போல தி.மு.க. சார்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் இருந்து நாமக்கல் சுற்றுலா மாளிகை வரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
தொடர்ந்து நாளை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.87.38 கோடியில் 139 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.10.80 கோடியில் முடிவுற்ற 36 திட்டப்பணிகளை திறந்து வைப்பதோடு, பல்வேறு துறைகளின் சார்பில் 2,001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். அரசு நலத்திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.131 கோடியே 36 லட்சம் ஆகும்.
தொடர்ந்து நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதற்கட்டமாக பட்டாக்கள் மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க உள்ளார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன விளையாட்டு உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைக்க உள்ளார்.
- போலீசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்கள் நிலை என்ன?
- முதலுதவி கூட செய்யாமல் என் அக்காவை கொன்றுவிட்டார்கள்
நாமக்கல் மாவட்டம் பேவல்குறிச்சி காவல் நிலையத்தின் பெண் எஸ்எஸ்ஐ காமாட்சி காவல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காமாட்சியின் இறப்புக்கு பணிச்சுமையே காரணம் என அவரது சகோதரி, ஆய்வாளர் மீது புகார் தெரிவித்துள்ளார்.
அதன் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்," எனது சகோதரிக்கு விடுப்பு கொடுக்காமல் டார்ச்சர் செய்தே கொன்றுவிட்டீர்கள். போலீசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்கள் நிலை என்ன?
வயிற்றில் கட்டி இருப்பதால் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், விடுப்பு கொடுக்காமல் வேண்டும் என்றே இரவு பணிக்கு வர வெச்சிருக்காங்க.
காவல் நிலையத்திலேயே உயிரிழந்திருக்காங்க. மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தால் மருத்துவர்கள் சோதித்திருப்பார்கள். ஆனால், இங்கு முதலுதவி கூட செய்யாமல் என் அக்காவை கொன்றுவிட்டார்கள்" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.






