என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • அ.தி.மு.க., விஜய் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.

    விஜய்யின் அரசியல் வருகை 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் இருந்தது.

    அதே நேரம் அவருடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் சில கட்சிகள் ஈடுபட்டன. ஆனால் தி.மு.க. மற்றும் பா.ஜனதா மீது அவர் வைத்த கடுமையான விமர்ச னங்கள் மூலம் தனித்து போட்டியிடும் முடிவைத் தான் விஜய் தேர்வு செய்வார் என்று நினைக்க வைத்தது.

    இந்த சூழ்நிலையில் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அரசியல் போக்கையே மாற்றியது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விஜய் மீதான அணுகுமுறை த.வெ.க.வினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களில் த.வெ.க.வினர் தங்கள் கட்சி கொடிகளுடன் கலந்து கொள்ள தொடங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் படங்களுடன் சுவரொட்டிகளையும் த.வெ.க.வினர் ஒட்டினார்கள்.

    இந்த இணக்கமான போக்கு அ.தி.மு.க., விஜய் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க.வினர் கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.

    இந்நிலையில், கூட்டத்தில் தவெக கொடிகளை வைத்திருந்தவர்கள் தவெகவினர் இல்லை. அதிமுக இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அதிமுக டி-ஷர்ட் அணிந்தபடி தவெக கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.

    அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இபிஎஸ் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

    • தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், ஏன் மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை.
    • கரூரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் நேற்று இரவு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது வெற்று கூட்டணி. ஆனால் நமது கூட்டணி வெற்றி கூட்டணி. வெல்லுகிற கூட்டணி நம் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி. அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும்.

    (த.வெ.க.) கொடி பறக்குது... பிள்ளையார் சுழி போட்டாங்க... எழுச்சி ஆரவாரம்... இந்த கூட்டத்தின் ஆரவாரம் மு.க.ஸ்டாலின் செவியை துளைத்துக்கொண்டு போகப்போகிறது. உங்களுடைய திட்டம் நிறைவேறாது. ஆகாயத்தில் கோட்டை கட்டி கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவர் தங்களது கூட்டணியை நம்பி இருக்கிறார். மீண்டும் ஆட்சியை அமைத்துவிடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு கானல் நீராக போகும். தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் எவ்வளவு துன்பத்தையும், துயரத்தையும் அனுபவித்து வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், ஏன் மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் எப்போது எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ? அப்போது எல்லாம் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கும். தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதனை கட்டுப்படுத்தக்கோரி சட்டசபையிலும், பல்வேறு போராட்டங்கள் வாயிலாகவும் வலியுறுத்தினோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் சட்டம் சந்தி சிரிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் உடல் உறுப்புகளை மக்கள் விற்பனை செய்யக்கூடிய அவலம் இருந்து வருகிறது. தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான ஒரு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு கிட்னி எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கிட்னி முறைகேட்டை மதுரை ஐகோர்ட்டு கடுமையாக கண்டித்து உரிய விசாரணை நடத்தவும் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால் தனியாக சிறப்பு விசாரணை நடத்தப்படவில்லை.

    கரூர் சம்பவத்தில் 41 பேரின் உயிர்கள் பலியாகி இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு, இரவாக அங்கு சென்றுள்ளார். உடனடியாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்று அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?. அதிகாரிகளை வைத்து அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி அதிகாரிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் கூறுகிறார்கள்.

    அரசியல்வாதிகள் அரசியல் பேசலாம். ஆனால் அதிகாரிகள் அரசியல் பேசலாமா?. இதில் இருந்து கரூரில் திட்டமிட்டு சதி நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதனால் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை தேவை என வலியுறுத்தி வருகிறோம்.

    கரூரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் காவல்துறை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும். எனவே, மக்களுக்கு நியாயம், உண்மை தெரிய வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அப்போது தான் இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற உண்மை வெளிவரும்.

    தி.மு.க. ஆட்சி அமைந்து 53 மாதங்கள் முடிந்துவிட்டன. இன்னும் உங்களுக்கு 7 மாதங்கள் தான் ஆயுட்காலம். விரைவில் தி.மு.க. ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக அரசு திருச்செங்கோடு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.
    • கொரோனா பரவல் காலத்தில் மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கியது அதிமுக அரசு.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் இன்று மாலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை நடத்தினார்.

    அப்போது அவர் உரையாற்றியதாவது:-

    திருச்செங்கோடு தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதிமுக எங்கு கூட்டம் நடத்தினாலும் அது வெற்றி கூட்டமாக இருக்கும்.

    திமுக அரசு திருச்செங்கோடு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. திருச்செங்கோடு தொகுதிக்கு அதிமுக ஆட்சி காலத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

    கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அதிமுக அரசு மக்களை காப்பாற்றியது. கொரோனா பரவல் காலத்தில் மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கியது அதிமுக அரசு.

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம், தாலிக்கு தங்கம் திட்டத்தில் பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்-பொத்தனூர் நான்கு ரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேச போலீசில் அனுமதி கேட்கப்பட்டது.
    • அனுமதி கேட்ட இடங்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாமக்கல்:

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 19-ந்தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20-ந்தேதி நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரிலும், 21-ந் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக அவரின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக அக்டோபர் 5 மற்றும் 6-ந்தேதிகளில் பிரசாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்செங்கோடு தொகுதியில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகிலும், அதன்பிறகு குமாரபாளையம் தொகுதியில் ஓலப்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய போலீசில் அனுமதி கேட்கப்பட்டது. அதேபோல், நாளை மறுநாள் (6-ந்தேதி) மாலையில் நாமக்கல் பழைய பஸ் நிலையம் அருகிலும், அதைத்தொடர்ந்து பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்-பொத்தனூர் நான்கு ரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேச போலீசில் அனுமதி கேட்கப்பட்டது.

    இதற்கிடையே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் அனுமதி கேட்ட இடங்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஓரங்களில் பொதுக்கூட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு கோர்ட் அனுமதி கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் அவர்கள் கேட்ட இடங்களுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்றனர். எனவே எடப்பாடி பழனிசாமி வேறு இடத்தில் பிரசாரம் செய்யவும், பட்டா இடத்தில் 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் கூட்டத்தை நடத்திக்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

    • விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
    • விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.

    கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதனையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.

    இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து, தமிழ்நாடு மாணவர் சங்கம் பெயரில் நாமக்கல் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த போஸ்டரில் "தமிழக அரசே 39 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக்குற்றவாளி என கைது செய்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுசா சொல்லுங்க புதுசா சொல்லுங்கண்ணா என்னத்த சொல்ல சொல்றீங்க எனக்கு புரியலையே.
    • ஒரு சாலை வசதி பாதுகாப்பான வாழ்க்கை இதுதான் ஒரு அடிப்படை மனிதனுக்கு தேவை.

    நாமக்கல்லில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்," திராவிட முன்னேற்ற கழகத்தை போல் பொய் வாக்குறுதிகளை என்றும் சொல்ல மாட்டோம்.. நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடித்து விடுவது போல் அடித்துவிடுவோமா?" என்று கூறினார்.

    மேலும் கூறியதாவது:-

    ஏன் எந்த விஜய் எந்த இடத்திற்கு சென்றாலும் கேள்வியாக கேட்கிறார் இதற்கான விளக்கத்தை ஏற்கனவே இரண்டு இடத்தில் கூறியிருந்தோம் கல்வி ரேஷன் மருத்துவம் அடிப்படை சாலை வசதி மின்சாரம் போக்குவரத்து பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு இது போன்ற அடிப்படை விஷயங்களில் எந்த சமரசம் இல்லாமல் சரியாக செய்யப்படும் என கூறியிருந்தோம் இதைத்தானே எல்லோரும் சொன்னார்கள் அதைத்தான் இவரும் சொல்றாரு இவர் புதிதாக ஏதும் சொல்லவில்லை.

    ஐயா அரசியல் மேதைகளே பெரியவர்களே ஒரு மனிதனுக்கு சாப்பிடுவதற்கு நல்ல சாப்பாடு படிப்பதற்கு நல்ல கல்வி குடிப்பதற்கு நல்ல குடிநீர் மருத்துவ வசதி வேணுன்ற இடத்திற்கு போயிட்டு வர ஒரு சாலை வசதி பாதுகாப்பான வாழ்க்கை இதுதான் ஒரு அடிப்படை மனிதனுக்கு தேவை.

    அப்புறம் அதை சரியாக செய்வோம் என்று சொல்வது தானே சரி. இது திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை எப்பொழுதும் கொடுக்க மாட்டோம்.

    புதுசா சொல்லுங்க புதுசா சொல்லுங்கண்ணா என்னத்த சொல்ல சொல்றீங்க எனக்கு புரியலையே.

    புதுசா என்னப்பா சொல்றது செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும் ,காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும் ,வீட்டுக்குள் ஏரோபிளேன் ஓட்டப்படும், இது போன்ற அடித்து விடுவோமா நம்முடைய முதலமைச்சர் அடித்து விடுவாரே அது போன்ற அடித்து விடுவோமா.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிட்னி திருட்டில் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
    • குறிப்பாக விசைத்தறையில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து இந்த கிட்னி திருட்டு நடந்திருக்கிறது.

    விஜய் இன்று நாமக்கலில் பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு., அதுதான் நாடறிந்த விஷயம் ஆயிற்றே. அதை ஏற்கனவே திருச்சியில் பேசியிருந்தேன். ஆனால் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக விசைத்தறையில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து இந்த கிட்னி திருட்டு நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.

    இந்த விஷயத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்மளுடைய ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

    இந்த கிட்னி திருட்டு எங்கிருந்து தொடங்கியது என்று பார்த்தால் கந்துவட்டி கொடுமையில் இருக்கிறது. அதாவது விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தையும் பொருளாதாரத்தையும் எந்த ஏற்றமும் இல்லாமல் செய்துள்ள இந்த மாடல் அரசு, மேம்படுத்தாத காரணத்தினால் அவர்கள் கிட்னியை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை.

    விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான தேர்வுகளை யோசித்து உறுதியாக தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.

    இவ்வாறு விஜய் பேசினார்.

    • 2026 தேர்தலில் திமுக- தவெக இடையில் தான் போட்டி.
    • அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.

    திமுக- பாஜக இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    2026 தேர்தலில் திமுக- தவெக இடையில் தான் போட்டி.

    ஜெயலலிதா சொன்னதை மறந்துவிட்டு, பொருந்தாக் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் நலனுக்காகக் கூட்டணி வைத்ததாகக் கூறுவது.

    பாஜகவுடன் கூட்டணி தேவையா என நான் கேட்கவில்லை, எம்ஜிஆரின் தொண்டர்கள் கேட்கின்றனர்.

    அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.

    தவெக, பாசிச பாஜக அரசுடனும், திமுக அரசுடனும் ஒத்துப் போகாது.

    திமுகவிற்கு போடப்படும் ஓட்டு பாஜகவிற்கு போடப்படும் ஓட்டு. உஷாராக இருங்கள் மக்களே.

    வரும் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதா சொன்ன விசயத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு, ஒரு பொருந்தா கூட்டணியை அமைச்சிக்கிட்டு,
    • தமிழக நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம் என சொல்கிறார்களே, அவர்கள் போன்று ஒருபோதும் இருக்க மாட்டோம்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நாமக்கலில் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் ஏற்கனவே சொன்னதைத்தான் சொல்கிறேன். ஒன்று, பாசிச பாஜக உடன் எப்போதும் ஒத்துப்போக மாட்டோம். 2ஆவது திமுக போன்று பாஜக உடன் மறைமுக கூட்டணியாக இருக்கமாட்டோம்.

    3ஆவது மூச்சுக்கு முன்னூறு முறை அம்மா அம்மா எனச் சொல்லிக்கிட்டு, ஜெயலலிதா சொன்ன விசயத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு, ஒரு பொருந்தா கூட்டணியை அமைச்சிக்கிட்டு, தமிழக நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம் என சொல்கிறார்களே, அவர்கள் போன்று ஒருபோதும் இருக்க மாட்டோம்.

    தெரியாமல்தான் கேட்கிறேன். இந்த பாஜக அரசு தமிழ்நாட்டு அரசுக்கு என்ன செஞ்சிட்டாங்க. நீட் தேர்வை ஒழிச்சிட்டாங்களா? கல்வி நிதியை முழுமையாக கொடுத்திட்டாங்களா? தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து விசயங்களையும் செஞ்சிட்டாங்களா?. அப்புறம் எதற்கு இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று நான் கேட்கல., புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கிறார்கள். அவர்கள் கூட்டு, பொரியல், அப்பளம் என எதாவது கிண்டிகிடட்டும். நமக்கு எதுக்கு.

    இவ்வாறு விஜய் பேசினார்.

    • விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நாமக்கல்லுக்கு புறப்பட்ட விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பல்லாயிரக்கணக்காக குவிந்திருந்த தொண்டர்களின் மத்தியில் பிரசாரம் நடைபெறும் கே.எஸ்.திரையரங்கத்திற்கு விஜய் வர தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, பிரசார வாகனத்தில் வந்த விஜய்க்கு மக்கள் புடைசூழ ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

    அப்போது, விஜய்க்கு தொண்டர்கள் பரிசுகளை வழங்கினர். அதில் ஒரு தொண்டர் நடிகர் அஜித் மற்றும் விஜய் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வழங்கினார். அப்போது விஜய் புகைப்பட பிரேமில் கையெழுத்திட்டு வங்கினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



    • மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமை வழங்கியதில் மிகப்பெரிய பங்கு சுபராயனுக்கு உண்டு.
    • அவருக்கு மணி மண்டபம் கட்டுவோம் என வாக்குறுதி கொடுத்தார்கள், செய்தார்களா?.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று நாமக்கல் சேலம் சாலையில் உளள் கே.எஸ். தியேட்டர் அருகே, மக்களை சந்தித்து பிராசரம் செய்கிறார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையாக வழங்கியதும், இதே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர்தான். அவர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சுப்பராயன்தான் அவர். அவர்தான் மாபெரும் மனிதர். மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமை வழங்கியதில் மிகப்பெரிய பங்கு அவருக்கு உண்டு.

    பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கினார். இதனால்தான் முதல்வராக பதவி ஏற்ற முதல் தமிழர் என்ற பெருமையாக சொன்னதும் மட்டுமல்ல, அவருக்கு மணிமண்டபம் கட்டுவதாக வாக்குறுதி கொடுத்தது யார்?. சொன்னார்களே செய்தார்களா?.

    வடிவேல் ஒரு படத்தில் Empty பாக்கெட்டை காட்டுவதுபோல், ஒவ்வொரு வாக்குறுதியையும் படித்துவிட்டு, பாக்கெட்டை காட்ட வேண்டியதுதான்.

    இவ்வாறு விஜய் பேசினார்.

    • தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான்.
    • நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் ராமலிங்கம்.

    தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நாமக்கல்லில் தனது பிரச்சார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடங்கினார்.

    அப்போது, தொண்டர்களிடம் அனைவரும் சாப்பீட்டீர்களா என கேட்ட விஜய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்டார்.

    என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று தவெக தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார்.

    அப்போது அவர் மேலும் கூறியதாவது:-

    லாரி பாடி கட்டும் தொழிலில் இருந்து அதிக தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல். முட்டையின் உலகமே நாமக்கல் தான்.

    சத்தான உணவு முட்டை கொடுக்கும் ஊர் மட்டுமல்ல. தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான்.

    தமிழக என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் ராமலிங்கம்.

    பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொடுத்த முன்னாள் முதல்வர் சுப்பராயன் பிறந்த மண் நாமக்கல்.

    நாமக்கல்லுக்கு அது செய்வோம் இது செய்வோம் என சொன்னார்களே? செய்தார்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×