என் மலர்
நீங்கள் தேடியது "திமுகு"
- 2026 தேர்தலில் திமுக- தவெக இடையில் தான் போட்டி.
- அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
திமுக- பாஜக இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2026 தேர்தலில் திமுக- தவெக இடையில் தான் போட்டி.
ஜெயலலிதா சொன்னதை மறந்துவிட்டு, பொருந்தாக் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் நலனுக்காகக் கூட்டணி வைத்ததாகக் கூறுவது.
பாஜகவுடன் கூட்டணி தேவையா என நான் கேட்கவில்லை, எம்ஜிஆரின் தொண்டர்கள் கேட்கின்றனர்.
அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
தவெக, பாசிச பாஜக அரசுடனும், திமுக அரசுடனும் ஒத்துப் போகாது.
திமுகவிற்கு போடப்படும் ஓட்டு பாஜகவிற்கு போடப்படும் ஓட்டு. உஷாராக இருங்கள் மக்களே.
வரும் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- களச்செயல்பாடுகள் குறத்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஆலோசனை.
- ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!
உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடி கொண்டிருக்கும்போது ஓய்வெடுக்க மனமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உயிராக இயக்கும் களச்செயல்பாடுகள் குறத்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை!
உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது.
- பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.ம.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டி.டி.வி. தினகரன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பெரியகுளம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். அதே போல் மீண்டும் என்னை வெற்றி பெற வைத்தால் தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு வார்டு உறுப்பினர் போல் செயல்படுவேன்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதே சின்னத்தில் இங்கும் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா இருந்த போது அவரிடம் தேனி தொகுதிக்கான திட்டங்களை பெற்றுத்தந்தது போல மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியிடம் கூறி வளர்ச்சிக்கான நிதியை வாங்கித் தருவேன்.
தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை பெற மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது. பிரதமர் வேட்பாளரை ஒரு வேளை அறிவித்தால் அந்த கூட்டணி கட்சிகள் சிதறி ஓடி விடும்.
தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை கையில் தூக்கியபடி பேசினார். தற்போது மீண்டும் அதே செங்கலை தூக்கி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியளித்தார். இதற்காக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றும் அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. அந்த ரகசியம் எங்களிடம்தான் உள்ளது என தி.மு.க.வினர் கூறி வந்த நிலையில் தற்போது பதில் கூற மறுத்து வருகின்றனர். இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
- வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது அதைக் கண்டு அலறப்போகிறீர்கள்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவின் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பூங்கா ஏரியில் தாமரை வளர்ந்திருப்பதை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என்று கிண்டலாக பேசினார்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜகவினர் பல ஆண்டுகளாக கூறிவரும் நிலையில், அதனை கிண்டலடிக்கும் விதமாக சேகர்பாபு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது என பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
அதில், குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது அதைக் கண்டு அலறப்போகிறீர்கள். அரசு பூங்காவில் தாமரை வேண்டாம் என கூறும் நீங்கள் தாமரை அரசமைக்கும் காலத்தை பார்ப்பீர்கள் என கூறியுள்ளார்.






