மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு ஓய்வெடுக்க மனமில்லை..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

களச்செயல்பாடுகள் குறத்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஆலோசனை.ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!
மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு ஓய்வெடுக்க மனமில்லை..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடி கொண்டிருக்கும்போது ஓய்வெடுக்க மனமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, உயிராக இயக்கும் களச்செயல்பாடுகள் குறத்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை!

உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com