search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரன்பட்டினத்தில் இன்று இரவு காமதேனு வாகனத்தில் முத்தாரம்மன் பவனி
    X

    குலசேகரன்பட்டினத்தில் நேற்று இரவு மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் பவனி வந்த காட்சி.

    குலசேகரன்பட்டினத்தில் இன்று இரவு காமதேனு வாகனத்தில் முத்தாரம்மன் பவனி

    • தசரா திருவிழாவில் 5-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் காமதேனுவாகனத்தில் நவநீதகிஷ்ணர் திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
    • காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா திருவிழாவில் 5-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் காமதேனுவாகனத்தில் நவநீதகிஷ்ணர் திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    நேற்று மாலை 5 மணிக்கு வீரபாகு வல்லவராயர் மற்றும் பாரத திருமுகன் திருச்சபைச் சேர்ந்த மோகனசுந்தரம் ஆகியோர்கள் சமய சொற்பொழிவு நடத்தினர். இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடிஇணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    Next Story
    ×