search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு - பணிக்கு வராத டாக்டர் மீது நடவடிக்கை
    X

    அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய காட்சி

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு - பணிக்கு வராத டாக்டர் மீது நடவடிக்கை

    • மதுரை விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமான பயணிகளிடம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவனியாபுரம்:

    இந்தியாவில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    அதன் அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் மதுரை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த 7 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    இதையொட்டி மதுரை விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமான பயணிகளிடம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனையை காட்டும் கருவியின் செயல்பாடுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    மேலும் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சென்று அவரது ஆலோசனைகளை கேட்டுக் கொண்டனர்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த போது பணிக்கு வர வேண்டிய பூபேஸ்குமார் என்ற டாக்டர் வராததது தெரிய வந்தது. இது தொடர்பாக கேட்ட போது, டாக்டர் 2 மணி நேரம் தாமதாக பணிக்கு வருவேன் என்று தெரிவித்து இருந்ததாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட டாக்டர் எந்த ஆவணமும் வழங்கவில்லை என்று தெரிய வந்ததால் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட பொது சுகாதாரதுறை இயக்குனரை தொலைபேசியில் அழைத்து டாக்டர் பூபேஸ்குமார் பணிக்கு வராததை தெரிவித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

    Next Story
    ×