search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    அன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • புதிய வீட்டுமனை இடங்களுக்கு அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஆகின்றன.
    • அன்னூர் பேரூராட்சிக்கு நிரந்தரமான செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்.

    அன்னூர்

    கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு கடந்த 6 மாத காலமாக செயல் அலுவலருக்கான இடம் காலியாக உள்ளது.

    தற்காலிகமாக கோவில்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கடந்த 6 மாத காலமாக அன்னூர் பேரூராட்சியும் சேர்த்து கூடுதலாக கவனித்து வருகின்றார்.

    இதனால் புதிய வீட்டுமனை இடங்களுக்கு அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஆகின்றன. புதிதாக குடிநீர் குழாய் இணைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பேரூராட்சி பகுதி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை கொட்டுவதற்கான சரியான இடம் கூட தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

    ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் வாரச்சந்தை வணிக வளாக பணிகள் சீராக முடிக்கப்படுவதிலும், சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும், கிராமப்புறங்களில் ஏற்படும் ஈ தொல்லைகளை கட்டுப்படுத்தவும், அன்றாட பிரச்சினைகளான குடிநீர் குழாய்கள் உடைப்புகள், சாலை பழுதுகள், தேங்கும் குப்பை எடுப்பதில் தாமதம் என அனைத்து பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகான உடனடியாக அன்னூர் பேரூராட்சிக்கு நிரந்தரமான செயல் அலுவலரை நியமிக்க கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் மற்றும் அன்னூர் ஒன்றிய குழு தலைமை சரவணன் ஆகியோரின் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×