என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மகள் உறவு சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது
- மகள் உறவு சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- இதனையடுத்து அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல், ஆக. 5-
திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 44). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சென்னமநாயக்கன்–பட்டியைச் சேர்ந்த 37 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகியுள்ளது. இதில் 2-வது கணவர் மூலம் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் முருகனை 3-வதாக திருமணம் செய்துள்ளார். அவர் இல்லாத சமயத்தில் தனது மகள் முறை உறவு கொண்ட 11 வயது சிறுமிக்கு முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முருகன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்