search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகள் உறவு சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது
    X

    கோப்பு படம்

    மகள் உறவு சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது

    • மகள் உறவு சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • இதனையடுத்து அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    திண்டுக்கல், ஆக. 5-

    திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 44). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சென்னமநாயக்கன்–பட்டியைச் சேர்ந்த 37 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகியுள்ளது. இதில் 2-வது கணவர் மூலம் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் முருகனை 3-வதாக திருமணம் செய்துள்ளார். அவர் இல்லாத சமயத்தில் தனது மகள் முறை உறவு கொண்ட 11 வயது சிறுமிக்கு முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

    இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முருகன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×