என் மலர்
மதுரை
- தி.மு.க. வலிமையாக இருப்பதாக அண்ணாமலை எங்கேயும் கூறவில்லை. அவரது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.
- ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தற்போதைய சூழலில் நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை
* அ.தி.மு.க.வை உடைக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.விற்கு கிடையாது.
* அ.தி.மு.க.வில் தற்போதைய சூழலில் எந்த பிளவும் இல்லை.
* தி.மு.க. வலிமையாக இருப்பதாக அண்ணாமலை எங்கேயும் கூறவில்லை. அவரது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.
* ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
* உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தது சாதாரணமானது.
* அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பு பற்றிய தகவல் முழுமையாக எனக்கு தெரியாது.
* அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
* 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பின் யார் ICU-வில் இருக்கிறார்கள் என்பது தெரியும் என்றார்.
- அதிகாரிகள் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர்.
- குழந்தையை பறித்துக் கொண்டு அவரை வயிற்றில் எட்டி உதைத்தாக கூறப்படுகிறது.
மதுரை:
மதுரை மாவட்டம் திரு மங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகா இ.கோட்டைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகள் அர்ச்சனா (வயது 23). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ராஜீவ்நகரை சேர்ந்த பரத் (25) என்பவருக்கும் கடந்த 25.10.2023-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகை, பணம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் திருமணமான 6-வது மாதத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டாரின் கோர முகம் வெளிப்பட தொடங்கியது. அதாவது கணவர் பரத், அவரது தம்பி ஆதிதர்மலிங்கம், தாயார் ஈஸ்வரி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, அர்ச்சனாவிடம் உனது தந்தையிடம் சென்று 100 பவுன் நகை மற்றும் சொத்தில் பங்கு கேட்டு வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதற்கு அர்ச்சனா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும் மருமகள் என்றும் பாராமல் அவரை அடித்து, உடைத்து பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கி உள்ளனர்.
ஆபாச வார்த்தைகளால் திட்டித்தீர்த்த அவர்களிடம் இனிமேலும் வாழமுடியாது என்று கருதிய அர்ச்சனா, நடந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலத்திற்கு சென்று தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி அர்ச்சனா அங்கு சென்று புகார் கொடுத்தார்.
இதையடுத்து அதிகாரிகள் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர். கடந்த 14-ந்தேதி தான் பெற்றெடுத்த குழந்தையுடன் அர்ச்சனா சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த அர்ச்சனாவின் கணவர், மனைவியின் கையில் இருந்த குழந்தையை பறித்துக் கொண்டு அவரை வயிற்றில் எட்டி உதைத்தாக கூறப்படுகிறது. மேலும் அவரது தம்பி மற்றும் அர்ச்சனாவின் மாமியாரும் சேர்ந்துகொண்டு தாக்கியுள்ளனர்.
இதனை தடுத்த அர்ச்சனாவின் தந்தை முருகேசனும் கடுமையாக தாக்கப்பட்டார். அப்போது அர்ச்சனா கழுத்தில் இருந்து அறுந்து விழுந்த 1 பவுன் சங்கிலியை கணவர் பரத்தின் தம்பி ஆதிதர்மலிங்கம் அபகரித்துக்கொண்டதாக அர்ச்சனா, மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பரத், ஆதிதர்மலிங்கம், ஈஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பா.ஜ.க. கூட்டணியில் எடப்பாடி முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பது நல்ல கருத்து தான்.
- தர்மயுத்தத்தின் அடிப்படையில் கோர்ட்டில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்ற தத்துவத்தை எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் வரவேற்கிறேன். அதற்கான முழு ஒத்துழைப்பை தருவேன். அ.தி.மு.க. ஒன்றிணையாவிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாகி விடும். எனவே அனைவரும் ஒன்றிணைந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். என்னை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த டிமாண்ட்டும் வைக்கவில்லை. அரசியலில் எதிரிகளும் இல்லை. நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
பா.ஜ.க. கூட்டணியில் எடப்பாடி முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பது நல்ல கருத்து தான். தர்மயுத்தத்தின் அடிப்படையில் கோர்ட்டில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே ஒன்றிணைவதற்கு முன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச வேண்டி உள்ளது. செங்கோட்டையன் அனைவரும் இணைய வேண்டும் என எடுத்த முயற்சி வெற்றி பெறும். என்.டி.ஐ. கூட்டணி தொடர்பாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தொடர்ந்து நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
- கூடுதல் பெட்டிகள் இணைப்புக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
மதுரை:
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்துக்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி முதல் நிரந்தர ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.
அதாவது, சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாராகும் பெட்டிகளை கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரெயிலாக வந்தே பாரத் ரெயில் உள்ளது. பிற ரெயில்களை விட வந்தே பாரத் ரெயிலில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வந்தே பாரத் ரெயில்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் வந்தே பாரத் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.
மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரெயிலில் 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரு எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டு இருந்தன. இந்த ரெயில் மதுரையில் இருந்து தினமும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. வாரந்தோறும் பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரெயிலில் தற்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அதாவது, நாளை (வியாழக்கிழமை) முதல் 14 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 2 எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் கூடிய ரெயிலாக இயக்கப்பட உள்ளது. இதற்கான ரெயில் பெட்டிகள் நேற்று கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டன.
கூடுதல் பெட்டிகள் இணைப்புக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
- வருகிற 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
- 15 சனிக்கிழமை, ஒரு ஞாயிறு என 16 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், என்டிஏ கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியது, த.வெ.க. தலைவரின் பிரசார சுற்றுப் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை அளித்த பதில் பின்வருமாறு:-
கொஞ்சம் பொறுத்திருப்போம். ஒரு முடிவு எடுத்த பிறகு கொஞ்சம் காலம் கொடுத்தீர்கள் என்றால், செட்டில் ஆவதற்கு எல்லோருக்கும் நேரம் வேண்டும். அவர்களும் வருத்தத்தில் எடுத்திருப்பார்கள். பொறுத்திருப்போம். காலம் கனிந்து வரட்டும். எல்லோரும் எங்களுடைய முயற்சியை செய்து கொண்டிருப்போம்.
ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமியின் பத்திரிகை செய்திகளை பார்த்தேன். அவர்களுடைய கருத்தை வைத்துள்ளனர். எங்கேயும் சண்டை ஏற்படுவதற்கான சூழலை நான் பார்க்கவில்லை. காலம் இருக்கிறது. பொறுத்திருப்போம். எல்லாம் சரியாகும்.
டி.டி.வி. விவகாரம் தொடர்பாக தோண்டி தோண்டி பேசுவது அழகல்ல. டிடிவி தினகரன் நல்ல தலைவர். அவருக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருக்காது.
அரசியல் என்பது 24 மணி நேரமும் செய்யக்கூடிய வேலை. நீங்கள் அதற்காக தயாராக இருக்க வேண்டும். முழு நேர வேலையாக இருக்க வேண்டும்.
த.வெ.க. ஒரு சீரியஸான கட்சி. திமுக-வுக்கு மாற்றான கட்சி எனச் சொல்கிறார்கள். அந்த வேகத்தை களத்தில் 24 மணி நேரமும் பார்க்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். திமுக எங்களுக்கு எதிரான என்றால் களத்தில் காட்டினால் மட்டுமே மக்கள் நம்புவார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி திமுக-வுக்கு மாற்று என மக்கள் நம்புவதற்கு காரணம், அதன் தலைவர்களை எப்போதும் சந்திக்கக் கூடிய அளவில் இருக்கிறார்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மக்களை பார்ப்பேன் என்றால், அவர்கள் அரசியலை எந்த அளவிற்கு சீரியஸாக எடுக்கிறார்கள் என மக்கள் பார்க்கிறார்கள்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் வருகிற 13ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமை மற்றும் ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிரசாரம் மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
- ஆண்டவர் நகர், விமான நிலையம் குடியிருப்பு, ஸ்ரீராம்நகர்.
மதுரை:
அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (10-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பைபாஸ்ரோடு முழுவதும், அவனியாபுரம் பஸ்டாண்ட், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், சந்தோஸ் நகர், வள்ளலானந்தாபுரம் ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமிநகர் முழுவதும், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர் முழுவதும்,
அண்ணாநகர், ஜே.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசி தோட்டம பெரியரதவீதி குடியிருப்பு பகுதிகள், பாம்பன் நகர். பாப்பாகுடி, டிமார்ட் அருகில், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி அன்பழகன் நகர், மண்டேலா நகர், போஸ்டர் டிரைனிங் காலேஜ், காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலையம் குடியிருப்பு, ஸ்ரீராம்நகர் ஆகிய பகுதிகிளல் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தவகலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
- வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
- விசாரணை முடிவில், மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை:
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கலா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மாறாந்தை கல்லத்திகுளம் கிராமத்தில் 350 ஏக்கர் நிலத்தில் உள்ள சுமார் 8 லட்சம் அரிய வகை மரங்களையும், மான்கள் உள்ளிட்ட விலங்குகளையும் எந்திரங்கள் மூலம் அழித்து தனியார் நிறுவனம் சோலார் கம்பெனி நிறுவுவதை தடுக்க வேண்டும்.
மேற்கண்ட 350 ஏக்கர் காடுகளை அரசே நில ஆர்ஜிதம் செய்து அருகில் உள்ள காவல் குட்டி பரம்பை பாதுகாக்கப்பட்ட காடுகளுடன் இந்த காடுகளையும் இணைக்க வேண்டும். தொல்லியல் துறையின் முன் அனுமதி இன்றியும் மாவட்ட பசுமை கமிட்டியின் அனுமதி இன்றியும் நகர்புற வளர்ச்சி துறையின் அனுமதியின்றியும் மரங்கள் அழிக்கப்பட்டு வருவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பினேகாஸ், அர்ஜுன் குமார் ஆகியோர் ஆஜராகி தனியார் நிறுவனத்திற்காக ஏராளமான மரங்களை வெட்டுவது சட்டத்துக்கு புறம்பானது என வாதாடினார். விசாரணை முடிவில், மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒருமித்த கருத்து உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்தால் அவர்களுடைய லட்சியங்கள் நிறைவேறும்.
- நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மதுரை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் அரசியல் வட்டாரத்தில் கடந்த ஆண்டு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. 7-வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும், தற்போதைய ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க. தனது தேர்தல் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது.
தி.மு.க. தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது கடிதங்கள் வாயிலாகவும், அறிக்கைகள் மூலமாகவும் உற்சாகப்படுத்தி வரும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தினமும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்த்து வைப்பதன் மூலம் அவர்களின் வாக்குகளை பெற முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிக வாக்குகளை பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு சிறந்த எதிர்காலத்துடன் பரிசுகளும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது 4-ம் கட்ட பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி தொடர்பான கருத்துக்கள் சிறுசிறு சலசலப்பை ஏற்படுத்திய போதிலும் அதனை தவிர்த்துவிட்டு தனது எழுச்சி பயணத்தில் தொண்டர்களை ஊக்கப்படுத்தியும், தி.மு.க.வின் ஆட்சி, அவலங்கள் குறித்து பொதுமக்களிடமும் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்திட தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி அமித்ஷா, தி.மு.க.வின் கனவுகள் தவிடு பொடியாக் கப்படும். பிரதமராகும் ராகுல்காந்தியின் கனவும், தமிழ்நாட்டில் உதயநிதியை அடுத்த முதலமைச்சராக நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவும் பலிக்காது என்றார். அத்துடன் தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கு தொண்டர்கள் அயராது பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் வெளியேறியது, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், அதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிப்பு என்று ஒருபுறம் அந்த கூட்ட ணியில் பரபரப்பு காட்சிகள் தொடர்ந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் அதிரடி காட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து உடம் நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரிடம் சமரசம் பேச நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
மேலும், காலம் இருக்கிறது, நம்முடைய நோக்கமும், டி.டி.வி.தினகரனின் நோக்கமும் தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்பதுதான். தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒருமித்த கருத்து உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்தால் அவர்களுடைய லட்சியங்கள் நிறைவேறும். இதே தவிர்த்து விட்டு சூழ்நிலை காரணமாக வெளியேறிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். நான் இப்பொழுதுதான் மாநில தலைவராக இருந்து கட்சியை பலப்படுத்துகிற வேலையை செய்கிறேன் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பரப்புரை பயணம், மாநாடு, சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ள நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழகத்தின் நான்கு மூலைகளிலும் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த தமிழக பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கூட்டணியின் பலத்தை எதிர்க்கட்சிகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் பிரமாண்ட மாநில மாநாடுகளை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
அந்த வரிசையில் பா.ஜ.க.வும் இணைந்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த மாநாடுகளில் பிரதமர் மோடியை பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அந்த மாநாடுகளில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளில் தற்போது முதலே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டு வருவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. நடத்தும் மாநாட்டில் பிரதமரை பங்கேற்க செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியிருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
- திமுக என்றுமே தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது.
மதுரையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் நேரடியாக சென்று சமரசம் பேச தயாராக இருக்கிறேன்.
டிடிவி தினகரன் வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது. டிடிவி தினகரன் ஏன் கூட்டணியில் இருந்து வெளியில் சென்றார் என அவரைச் சொல்லச் சொல்லுங்கள்.
திமுக ஆட்சியில் இருக்க கூடாது. ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
திமுக என்றுமே தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செங்கோட்டையனை அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கியது விபரீத முடிவு.
- எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என உற்று நோக்கப்படுகிறது.
இதனிடையே, செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறுகையில்,
செங்கோட்டையனை அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கியது விபரீத முடிவு. செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியது அவருக்கு பின்னடைவு அல்ல, அதை செய்தவருக்குத்தான் பின்னடைவு என்பதை காலம் உணர்த்தும்.
எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன். கெடுவான் கேடு நினைப்பான் என்பது போன்று செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்றார்.
- கூட்டணி குறித்து டிசம்பரில் தான் அறிவிப்போம்.
- கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து நிதானமாகவே முடிவெடுத்தோம்.
மதுரை :
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகளை இணைக்க அமித்ஷா முயற்சி எடுத்து வருகிறார்.
* தேவையின்றி யாரையும் சந்திக்க வேண்டிய தேவை எனக்கில்லை.
* கூட்டணி குறித்து டிசம்பரில் தான் அறிவிப்போம்.
* கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து நிதானமாகவே முடிவெடுத்தோம்.
* அ.ம.மு.க.வை சிறிய கட்சி என நயினார் நாகேந்திரன் நினைத்திருக்கலாம்.
* கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை.
* விஜயுடன் கூட்டணி என பேசுவது தவறானது.
* தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக்கூறினேனே தவிர அவருடன் இணையப்போகிறேன் எனக்கூறவில்லை.
* அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் ஆவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்றார்.
- ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு அறிவிப்பு வரவேற்கத்தக்க வடிவில் இல்லை.
- செங்கோட்டையனின் அறிவிப்பு அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம்.
மதுரை:
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், ஆசிரியர் தினம். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்துகள்.
மதுரையில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ராமகிருஷ்ணன் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்திருக்கிறார். குப்பை கிடங்கில் அவர் தூக்கில் தொங்கவிடப்பட்டு இருக்கிறார். அந்த மரணம் தற்கொலை அல்ல, கொலை என சந்தேகிக்கும் நிலையில் உள்ளது. ஆகவே அவரின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.
அவர் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக மதுரை வந்திருக்கிறேன். அந்த மரணத்தில் கொலைக்கான முகாந்திரம் இருப்பதாக தெரிகிறது. வழக்கமாக காவல்துறை விசாரிப்பதை போல் இல்லாமல் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆணை இடவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். அந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு அறிவிப்பு வரவேற்கத்தக்க வடிவில் இல்லை. அமெரிக்க பேரரசு நமது மீது விதித்திருக்கிற 50 சதவீத வரி தொடர்பாக மடை மாற்றம் செய்வதற்கு இந்திய அரசு அல்லது பிரதமர் முயற்சிக்கிறார் என்று விமர்சனங்கள் வெளி வந்துள்ளது. 28 சதவீதமாக இருந்த வரி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறுகுறு, நடுத்தர தொழில் செய்யக்கூடியவர்கள் சிறு வணிகர்கள், எளிய மக்கள் பெரிதும் பயன்பட போவதில்லை என வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள்.
செங்கோட்டையனின் அறிவிப்பு அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம். அ.தி.மு.க. ஒருங்கிணைய வேண்டும் என கட்சிக்குள் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளார்கள். அவர் இன்று மனம் திறந்து பேச போவதாக சொன்னார், ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று அவரின் பேட்டியில் தெரியவருகிறது. அவர் இன்னும் வெளிப்படையாக சொல்லலாம். இருந்தாலும் அவர்களின் உட்கட்சி விவகாரம், பெரியார் இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.வை பெரிதும் மதிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






