அ.தி.மு.க. ஒன்றிணையாவிட்டால் தி.மு.க.வுக்கு சாதகமாகிவிடும்- ஓ.பி.எஸ்.பேட்டி

பா.ஜ.க. கூட்டணியில் எடப்பாடி முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பது நல்ல கருத்து தான். தர்மயுத்தத்தின் அடிப்படையில் கோர்ட்டில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அ.தி.மு.க. ஒன்றிணையாவிட்டால் தி.மு.க.வுக்கு சாதகமாகிவிடும்- ஓ.பி.எஸ்.பேட்டி
Published on

மதுரை:

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்ற தத்துவத்தை எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் வரவேற்கிறேன். அதற்கான முழு ஒத்துழைப்பை தருவேன். அ.தி.மு.க. ஒன்றிணையாவிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாகி விடும். எனவே அனைவரும் ஒன்றிணைந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். என்னை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த டிமாண்ட்டும் வைக்கவில்லை. அரசியலில் எதிரிகளும் இல்லை. நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

பா.ஜ.க. கூட்டணியில் எடப்பாடி முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பது நல்ல கருத்து தான். தர்மயுத்தத்தின் அடிப்படையில் கோர்ட்டில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே ஒன்றிணைவதற்கு முன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச வேண்டி உள்ளது. செங்கோட்டையன் அனைவரும் இணைய வேண்டும் என எடுத்த முயற்சி வெற்றி பெறும். என்.டி.ஐ. கூட்டணி தொடர்பாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தொடர்ந்து நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com