என் மலர்
மதுரை
- கோவிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஞ்சாமிர்த விற்பனை தொடங்கப்பட்டது.
- பஞ்சாமிர்தம் 250 கிராம் 30 ரூபாய்க்கும், 500 கிராம் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மதுரை:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாக சிறப்பு பெற்றது பழமுதிர்சோலை முருகன் கோவில். பிரசித்தி பெற்ற அழகர் மலையில் உள்ளதால் இங்கு பக்தர்களின் வருகை எப்போதும் அதிகமாக இருக்கும்.
அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இக்கோவிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஞ்சாமிர்த விற்பனை தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 5 மாதங்களில் ரூ. 13 லட்சத்திற்கு பஞ்சாமிர்தம் விற்பனை ஆனது. இந்த ஆண்டு அதே கால கட்டத்தில் பஞ்சாமிர்த விற்பனை ரூ.20 லட்சத்தை எட்டியுள்ளது. பஞ்சாமிர்தம் 250 கிராம் 30 ரூபாய்க்கும், 500 கிராம் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
முருகப்பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டினரும் பஞ்சாமிர்தத்தை விரும்பி வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளதாக கோவில் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவிலில் உள்ள ரஜினியின் 3 அடி உயர சிலைக்கு கலை நயம் மிகுந்த திருவாச்சியும், நாக கிரீடமும் வேத மந்திரங்கள் முழங்கிட சாத்தப்பட்டது.
- பிறந்தநாள் விழா பூஜைகளில் பங்கேற்ற அனைவருக்கும் ரஜினி கோவில் சார்பில் பிரசாதமும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பேருந்து நிலையம் அருகே ரஜினி காந்தின் தீவிர பக்தரும், முன்னாள் ராணுவ வீரருமான கார்த்திக் என்பவர் இந்தியாவிலேயே முதல் முறையாக ரஜினிக்கு கோவில் கட்டியுள்ளார்.
அங்கு மூன்று அடி உயர கருங்கல் சிலையுடன் நிறுவியுள்ள ரஜினி கோவிலில் தினமும் பூஜைகள் நடத்தி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ரஜினி பக்தர்களின் ஆன்மீக தலமாக திகழ்ந்திடும் இங்கு ரஜினிகாந்தின் 73-வது பிறந்ததின விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி கோவிலில் உள்ள ரஜினியின் 3 அடி உயர சிலைக்கு கலை நயம் மிகுந்த திருவாச்சியும், நாக கிரீடமும் வேத மந்திரங்கள் முழங்கிட சாத்தப்பட்டது. மேலும் இன்று பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த் நீண்டகாலம் நலமுடன் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு அருள் வழங்கிட வேண்டி அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடத்தப்பட்டது.
அதன் பின்னர் பிறந்தநாள் விழா பூஜைகளில் பங்கேற்ற அனைவருக்கும் ரஜினி கோவில் சார்பில் பிரசாதமும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ரஜினி கோவில் நிறுவனரும், முன்னாள் ராணுவ வீரருமான கார்த்திக் கூறுகையில், ஆன்மீக கடவுள் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த தின விழா திருமங்கலம் நகரிலுள்ள கோவிலில் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கோவிலிலுள்ள அவரது சிலைக்கு திருவாச்சி மற்றும் நாக கிரீடம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடைபெற்றது.
நாங்கள் குடும்பத்துடன் இந்த கோவிலில் பூஜை செய்து வருகிறோம். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்தில் இருந்து வெளிவர சிறப்பு பூஜைகள் நடைபெற்றது என்றார்.
- 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சிறார்களுக்கான அதிகளவு போதை மாத்திரை மற்றும் போதை டானிக் பயன்படுத்துவதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சிறார்கள் போதைக்கு அடிமையாகுவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை மாத்திரை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், மதுரையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பெரியார் கால்வாயில் இருந்து பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த பெரியாறு கால்வாய் மூலம் மேலூர் பகுதியில் 85,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு குடிநீருக்காக 10 நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் தங்கள் பகுதிக்கு விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாத காலமாக மேலூர் பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் கடையடைப்பு, ஊர்வலம், பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை ஆகிய போராட்டங்கள் இதுவரை நடத்தி முடித்து விட்டனர்.
ஆனால் இவர்களது கோரிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் இன்று மேலூர் பஸ் நிலையம் அருகே ஒருபோக பாசன விவசாய சங்க தலைவர் முருகன் தலைமையில் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மேலூர் அனைத்து வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டிவிட்டது. மேலும் அதன் எதிரொலியாக இடுக்கி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சூழ்நிலையாவது மேலூர் பகுதிக்கு பெரியார் கால்வாயில் இருந்து தாமதிக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
- அனைத்துக் கட்சிகளை சார்ந்தவர்களும் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
- ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மதுரை:
மதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருகிற டிசம்பர் 29-ந்தேதியன்று திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, உட்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்ற ஒரு மாநாடாக இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த மாநாடு அடித்தளம் அமைப்பதாக அமையும் என்று நம்புகிறோம். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாக அமையும். ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து சனாதன சக்திகளை வீழ்த்துகின்ற ஒரு தேர்தலாக இந்த தேர்தல் அமைகின்ற சூழலில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சென்னையில் புயலால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள முடியவில்லை. அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என்று அனைத்துக் கட்சிகளை சார்ந்தவர்களும் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
ரூ. 5 ஆயிரம் கோடி பேரிடர் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற தருணங்களில் மாநில அரசை விமர்சிப்பதை அ.தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகள் கைவிட வேண்டும் என்றார்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
- துன்பத்தில், சோதனையில் உள்ள மக்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசவில்லை.
- வீராப்போடு மதுரையில் கட்சி தொடங்கி வீராப்பாக பேசிய கமல்ஹாசனின் வீராப்பு இப்போது எங்கே சென்றது?
மதுரை:
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் வெள்ளம் வடியவில்லை. மக்கள் வாழ் வாதாரம் இழந்துள்ளனர். அரசு செயலிழந்துவிட்டது. 40 நாட்களுக்கு முன்பாகவே புயல் குறித்து வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக் காட் டிய நிலையில் தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முன்னெச்சரிக்கையாக அனைத்துமே மக்களுக்கு செய்துவிட்டோம் என அமைச்சர்கள் சொல்லி சொல்லி கடைசி வரை எதையுமே செய்யாமல் மக்களை ஏமாற்றி விட்டனர். தி.மு.க. அமைச்சர்கள் முதலமைச்சரையும் ஏமாற்றிவிட்டனர். அமைச்சர்கள் சொன்ன பொய்களால் உட மைகளை, சொத்துக்களை மக்கள் இழந்துவிட்டனர்.
நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது. தேர்தலில் ஒரு சீட்டுக்காக தி.மு.க.விற்கு லாலி பாடுகிறார். தி.மு.க.வின் ஊதுகுழலாக கமல்ஹாசன் உள்ளார். கமல்ஹாசன் படத்தை மக்கள் இனி எந்த மாவட்டத்திலும் பார்க்க மாட்டார்கள்.
துன்பத்தில், சோதனையில் உள்ள மக்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசவில்லை. பதுங்கு குழியில் இருந்து கமல்ஹாசன் தான் தற்போது வெளி வந்துள்ளார். அரசியல் நாகரிக மற்றவர் கமல்ஹாசன்.
வீராப்போடு மதுரையில் கட்சி தொடங்கி வீராப்பாக பேசிய கமல்ஹாசனின் வீராப்பு இப்போது எங்கே சென்றது?
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் வாகனத்தில் வீடியோ காட்சி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.
- மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் நடந்த இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் கலைமகள் கல்லூரியில் இன்று மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை சந்தித்து உரையாடுதல் மற்றும் பத்தாண்டு கால சாதனைகள் , திட்டங்கள் குறித்து எடுத்து விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர் வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் வந்தார்.
பின்னர் அவர் கண்காட்சியை பார்வையிட்டார். அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்தனர்.
அப்போது மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் வாகனத்தில் வீடியோ காட்சி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் திடீரென விழிப்புணர்வு வாகனம் தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனே அருகில் இருந்த தீயணைப்பு துறையினர் கெமிக்கல் வாயுவை கொண்டு தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது.
மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் நடந்த இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழகத்தில் 300 ஏரிகள் காணவில்லை.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பா.ம.க. நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்.
மதுரை:
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பீகார், கர்நாடகாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. 2-க்கும் உள்ள வித்தியாசத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். பின் தங்கி உள்ள மக்களை கண்டறிந்து சிறப்பு சலுகைகள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இது தான் உண்மையான சமூக நீதி. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் தி.மு.க. சமூக நீதி பற்றி பேசக்கூடாது.
சென்னையில் புயலுக்கு பிறகு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. பலர் பால், குடிநீர் கூட கிடைக்காமல் அவதியடைகிறார்கள். 2015-ம் ஆண்டு வந்த வெள்ளத்தை பார்த்த பிறகு இன்னும் தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இனிமேலும் கற்றுக் கொள்ளப்போவதில்லை. தமிழக அரசு விலை நிலங்களை கைப்பற்றி நாசப்படுத்தி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 65 சதவீத தொழிற்சாலைகள் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வருகிறது.
சென்னையில் நீர்நிலைகளை தொழிலதிபர்களும், அரசும் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. தமிழகத்தில் 300 ஏரிகள் காணவில்லை. அடுத்த தலைமுறைகளை பற்றி இவர்களுக்கு கவலையில்லை. ஆனால் அடுத்த தேர்தலை பற்றி தான் சிந்திக்கிறார்கள். சென்னை வெள்ள பாதிப்பு தடுப்பு பணிக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவிட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் அமைச்சர் ரூ.1,900 கோடி செலவிட்டதாக சொல்கிறார். இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மதுரை வைகை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் பட்டியலின மக்கள் தாக்கப்படுகிறார்கள் இது கண்டிக்கத்தக்கது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பா.ம.க. நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். சென்னை வெள்ள பாதிப்புக்கு பா.ம.க. சார்பாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளத்தை கொடுக்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இருவரும் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
- இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில் சரண்
மோடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில் சரணடைந்தனர்.
- சிபிஐயின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சிபிஐயின் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
- ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே குற்றவாளி என சிபிஐ-யின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்தது.
மதுரை:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் (மே.2018) போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 15 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது.
துப்பாக்கி சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்தீபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சிபிஐக்கு புகார் மனு அனுப்பினார். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதன் அடிப்படையில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சிபிஐ விசாரணையை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.
சிபிஐயின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சிபிஐயின் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். கொலைகள் மற்றும் குற்றசெயல்களில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் வருவாய் அலுவலர் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மதுரையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ச்சுனன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி சண்முகையா. அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலைகள் வழக்கில், ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே குற்றவாளி என சிபிஐ-யின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்தது.
மீண்டும் இந்த வழக்கில் புலன் விசாரணை செய்து ஆறு மாதத்திற்குள் புதிய இறுதியறிக்கையை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை முதல் உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான ஜீவாதாரமாக 58 கிராம கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்போது மதுரை தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 33 கண்மாய்களும் 110 கிராமங்களில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பினால் தான் விவசாயம் மட்டுமின்றி நிலத்தடி நீரும் உயர்வதுடன் குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படும். எனவே, இந்த கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக இன்று உசிலம்பட்டியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. 58 கிராம கால்வாய் பாசனத்திட்ட விவசாய சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் உசிலம்பட்டி விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வர்த்தக சங்கம், நகைக்கடை வியாபாரி சங்கம், ஆட்டோ சங்கம், வியாபாரி சங்கம், பூக்கடை சங்கம், தினசரி மார்க்கெட் சங்கம், 54 தினசரி நவதானியம் பலசரக்கு சிறு வணிக வியாபாரிகள் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் இன்று காலை முதல் உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் உசிலம்பட்டி நகர் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு உசிலம்பட்டியில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை ரோடு, பேரையூர் ரோடு, வத்தலகுண்டு சாலை, தேனி சாலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. உசிலம்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் பூ கமிஷன் கடை வியாபாரிகள் மற்றும் பூ வியாபாரிகளும் அனைத்து கடைகளையும் அடைத்திருந்தனர்.
காலையில் திறந்திருந்த ஒருசில கடைகளும் பின்னர் அடைக்கப்பட்டன. பஜார் பகுதியில் விவசாயிகள் சங்கத்தினர் திரண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
- வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே வங்கி பணம் ரூ.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சுரேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுரை:
மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக மதுரை மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சுரேஷ் தான் வேலை பார்க்கும் வங்கியிலேயே தனது மனைவி மற்றும் சகோதரி பெயரில் போலியான நகைகளை அடகு வைத்துள்ளார். மேலும் அதன் மூலம் ரூ.8 லட்சத்து 91 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இந்த உண்மை வங்கியில் நடைபெற்ற தணிக்கை பணியின் போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
அதேபோல் ஏ.டி.எம். எந்திரங்களில் வங்கி சார்பில் வைக்க வேண்டிய ரூ.39 லட்சத்து 19 ஆயிரத்தையும் தனது மனைவி மற்றும் சகோதரியின் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.
அவ்வாறு கிடைத்த பணத்தை கொண்டு சுரேஷ், ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுரேஷ் மீதும் அவருக்கு உதவியதாக லட்சுமணன், சியர்ல தினா சுமதி ஆகிய 3 பேர் மீதும் கிளை மேலாளர் பெருகினியன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சுரேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே வங்கி பணம் ரூ.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






