என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கார் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்13 Oct 2022 8:10 AM GMT
- பேரையூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.
- இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள மதிப்பனூர் குழிப்பட்டி பகுதியை சேர்ந்த வர் பால்பாண்டி(வயது43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கோசலாதேவி அயன் கரிசல்குளத்திற்கு சென்றிருந்தார். அவரை கூப்பிட்டு வருவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பேரையூர் சிலைமலைபட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார், அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பால்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பேரையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பால்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கோசலாதேவி கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் ராமர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X