search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி தொழிலாளி பலி
    X

    கார் மோதி தொழிலாளி பலி

    • பேரையூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.
    • இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள மதிப்பனூர் குழிப்பட்டி பகுதியை சேர்ந்த வர் பால்பாண்டி(வயது43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கோசலாதேவி அயன் கரிசல்குளத்திற்கு சென்றிருந்தார். அவரை கூப்பிட்டு வருவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பேரையூர் சிலைமலைபட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த கார், அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பால்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பேரையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பால்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து கோசலாதேவி கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் ராமர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×