search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

    • தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ரூ.1.50லட்சம் மதிப்பிலான சீருடைகளுடன், பண்டிகை கால உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருமங்கலம்

    தீபாவளியையொட்டி திருமங்கலம் நகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் சீருடை மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1.50லட்சம் மதிப்பிலான சீருடைகளுடன், பண்டிகை கால உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    துணைத் தலைவர் ஆதவன் அதியமான், சுகாதார அலுவலர் சண்முகவேல், முன்னாள் கவுன்சிலர் முத்துக்குமார்,ீ கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னச்சாமி, சங்கீதா மற்றும் சுகாதார பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×