search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3¾ பவுன் செயின் திருட்டு
    X

    கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3¾ பவுன் செயின் திருட்டு

    • கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2 பெண்கள் 3¾ பவுன் செயினை திருடிச்சென்றனர்.
    • தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய பெண்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    லட்சுமிபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது49). இவர் நகைக்கடை பஜாரில் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று காலை இந்த கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் வந்தனர்.

    அவர்கள் இந்த கடையின் வாடிக்கையாளர்கள் என்று கூறி நகை வாங்க வந்துள்ளதாக தெரிவித்தனர். பல்வேறு டிசைன்களை காண்பிக்க சொல்லியுள்ளனர். பின்னர் டிசைன் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றனர்.

    இதையடுத்து ஊழியர்கள் கடையில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தனர். அப்போது 3¾ பவுன் செயின் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கடையில் கைவரிசை காட்டிய 2 பெண்களையும் தேடி வருகின்றனர். மேலும் நகை கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×