என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3¾ பவுன் செயின் திருட்டு
Byமாலை மலர்5 April 2023 9:35 AM GMT
- கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2 பெண்கள் 3¾ பவுன் செயினை திருடிச்சென்றனர்.
- தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய பெண்களை தேடி வருகின்றனர்.
மதுரை
லட்சுமிபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது49). இவர் நகைக்கடை பஜாரில் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று காலை இந்த கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் வந்தனர்.
அவர்கள் இந்த கடையின் வாடிக்கையாளர்கள் என்று கூறி நகை வாங்க வந்துள்ளதாக தெரிவித்தனர். பல்வேறு டிசைன்களை காண்பிக்க சொல்லியுள்ளனர். பின்னர் டிசைன் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றனர்.
இதையடுத்து ஊழியர்கள் கடையில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தனர். அப்போது 3¾ பவுன் செயின் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கடையில் கைவரிசை காட்டிய 2 பெண்களையும் தேடி வருகின்றனர். மேலும் நகை கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X