search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்
    X

    முகாம்

    தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்

    • மதுரை மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் 28-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை தெற்கு மண்டல அஞ்சல்துறை அலுவலக உதவி இயக்குநர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் மதுரை பீ.பி.குளத்தில் உள்ள தெற்குமண்டல அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கான புகார் மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17-ந் தேதியாகும்.

    தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்ப ப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    புகார், சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத்தொடர்புகள் இருந்தால் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட குறை தீர்க்கும் முகாம் சம்ப ந்தப்பட்ட அளவில் ஏற்க னவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும் குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்பட மாட்டாது.

    தனியார் கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்ப டமாட்டாது. குறைகளை "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்" ஜே.பிரதீப்குமார் உதவி இயக்குநர், அஞ்சல்துறைத்தலைவர் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை -625002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்

    pg.madurai@indiapost.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார்களை அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் ஜூன் 2022" என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மண்டல அஞ்சல்துறை அலுவலக உதவி இயக்குநர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×