search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரி மர்மச்சாவு
    X

    வியாபாரி மர்மச்சாவு

    • இரும்பு கடை வியாபாரி நடுரோட்டில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • அண்ணாமலை புதூர் கிராமத்துக்கு சேர்மன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

    திருமங்கலம்

    திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சேர்மன் (வயது 48). இவர் சென்னையில் இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சரவணகாந்திமதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் சொந்த ஊரான தென்காசி அருகே உள்ள அண்ணாமலை புதூர் கிராமத்துக்கு சேர்மன் குடும்பத்துடன் சென்றிருந்தார். அங்கு நடந்த விழாவில் பங்கேற்று விட்டு சம்பவத்தன்று அவர் மட்டும் பஸ்சில் இரவு சென்னைக்கு புறப்பட்டார்.இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுச்சாலையில் உள்ள கருவேலம்பட்டி பகுதியில் சேர்மன் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பஸ்சில் செல்லும்போது சேர்மன் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×