search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்மை அடையும் பெண்கள் சர்க்கரை வியாதியை எப்படி கையாள வேண்டும்?
    X

    டாக்டர் நிவேதிதா கார்த்திகா

    தாய்மை அடையும் பெண்கள் சர்க்கரை வியாதியை எப்படி கையாள வேண்டும்?

    • தாய்மை அடையும் பெண்கள் சர்க்கரை வியாதியை எப்படி கையாள வேண்டும்?
    • டாக்டர் நிவேதிதா கார்த்திகா விளக்கமளிக்கிறார்.

    மதுரை

    தாய்மை அடையும் பெண் கள் சர்க்கரை வியா தியை கையாளும் முறைகள் குறித்து மதுரை அன்யா என்டோக்ரின் மற்றும் டையப்பெட்டீஸ் மையத்தைச் சேர்ந்த டாக்டர் டாக்டர் நிவேதிதா கார்த் திகா அளித்துள்ள வழிகாட் டல்கள் வருமாறு:-

    வழிகாட்டல்கள்

    முழு தானியங்கள், குறை வான கொழுப்பு கொண்ட புரதச்சத்துக்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவான கிளைசீமிக் இன்டிசஸ் கொண்டிருக்கிறது. ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுப்பதற்கு அளவுகளை கட்டுப்படுத்துவது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு கள் மற்றும் சர்க்கரை பானங்களை தவிர்ப்பது அவசியம்.

    அத்தியாவசிய ஊட்டச் சத்து அளிக்கையில் ரத்த சர்க்கரை அளவுகளை நிலையாக வைக்கும் தனிப் பட்டதாக்கப்பட்ட உணவு திட்டங்களுக்கு டையட்டீஷி யனுடன் ஒருங்கிணைய வேண்டும். நிலையான ரத்த சர்க்கரை அளவுகளுக்காக சமமாக விநியோகிப்பதற்கு கார்போஹைட்ரேட் கணக் கிடுவதை புரிந்து கொள்ள வேண்டும்.

    நிலைத்தன்மை மிக்க சக்தி மற்றும் நிலையான ரத்த சர்க்கரை அளவுகளுக்கு முக்கிய உணவுகளுடன் பயிர்கள், கொழுப்பு இல் லாத இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற குறை வான ஜி.ஐ. உணவுகளை சேர்ப்பது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்காக அவோகாடோஸ், நட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற் றும் நெய் (மிதமான அள வில்) போன்ற ஆதாரங்களை சேர்ப்பது முக்கியம்.

    நிலையான ரத்த சர்க் கரை அளவுகளுக்காக நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிக ளிலிருந்து உணவில் உள்ள நார்சத்தை சாப்பிடுவது நீர்ச்சத்து, நார்ச்சத்தை அதி கரிக்க உதவும். ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கி யத்தை நிர்வகிப்பதற்கு சிபா ரிசு செய்யப்பட்ட உடல் ரீதியிலான நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியம்.

    ரத்த சர்க்கரை கட்டுப் பாட்டில் சாதகமான தாக் கத்தை ஏற்படுத்துவதற்கு தியானம், யோகா அல்லது ஆழமாக சுவாசிப்பதன் மூலமாக மன அழுத்தத்தை குறைப்பதற்கு பழகிக் கொள்வது, ரத்த சர்க்கரை அள வுகளில் இடையூறு களைத் தடுப்பதற்கு மற்றும் நலனை ஊக்குவிப்பதற்கு போதியளவு தூக்கத்தை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.

    உரிய நேரத்தில் அட் ஜஸ்ட் செய்வதற்காக வழக்க மாக ரத்த சர்க்கரை அளவு களை கண்காணிப்பது, திறன் வாய்ந்த சிகிச்சைகளுக் காக மருத்துவ தொழில் வல்லுனர்களுக்கு அவ்வப் போதைய தகவலை அளிப் பது, சாத்தியமாக இருந்தால், ரத்த சர்க்கரை ஒழுங்குப டுத்துவது மற்றும் பச்சிளம் குழந்தைக்கான ஊட்டச்சத் திற்காக தாய்ப்பால் ஊட்டு வதை கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு சர்க்கரை வியாதி பயணமும் தனித்தன் மையானது. இந்த வழிகாட் டுதல்கள் அடிப்படையா னவை. ஆனால், தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்திற்காக மருத்துவ தொழில் வல்லுனர்களுடன் ஒருங்கிணைவது அவசியமா னது. முன்கூட்டியே செய லாற்றுவது, தகவல் பெற்ற அணுகுமுறைகள் மற்றும் பலம் வாய்ந்த மருத்துவ தொடர்புகள் மூலமாக, தாய்மையின் மகிழ்ச்சியை தழுவிக் கொள்கையில் நீங்கள் மிகச் சரியாக சர்க் கரை வியாதியை நிர்வகிக்க லாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×