search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ெரயில் சேவை நீட்டிப்பு
    X

    எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ெரயில் சேவை நீட்டிப்பு

    • விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ெரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ெரயிலின் சேவை வேளாங்கண்ணி வரை, நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.

    அதன்படி எர்ணா குளத்தில் இருந்து அடுத்த மாதம் 13-ந் தேதி முதல் நவம்பர் 12-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சேரும்.

    மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 14 முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 6.30 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.

    இந்த ரெயில்கள் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினத்தில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×