search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகை அன்றும் பணியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு
    X

    தீபாவளி பண்டிகை அன்றும் பணியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு

    • தீபாவளி பண்டிகை அன்றும் பணியில் ஈடுபட்ட சோழவந்தான் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    • சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு வரத்து கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வெங்கடேசன் எம்.எல்.ஏ. களப்பணி ஆற்றியுள்ளார்.

    அவனியாபுரம்

    சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு வரத்து கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய தீபாவளி அன்று வெங்கடேசன் எம்.எல்.ஏ. களப்பணி ஆற்றியுள்ளார். இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சோழவந்தான் காவல் துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிகள், வாடிப்பட்டி பேரூராட்சி சேர்மன் மற்றும் சோழவந்தான் பேரூராட்சி சேர்மன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சோழவந்தான் விவசாயிகள் சங்க தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின், வாடிப்பட்டி பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. ஆலோசனைகள் வழங்கினார்.

    தொடர்ந்து அந்த வழியில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் வாலிபர்கள் சிக்கினர். அவர்களை ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் எம்.எல்.ஏ. தனது வாகனத்தை பயன்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். மேலும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பேசி நல்ல முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். தீபாவளி அன்று மக்கள் பணியில் ஈடுபட்ட சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×