search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் மோதி கல்லூரி மாணவர் சாவு
    X

    ரெயில் மோதி பலியான காளிதாஸ்.

    ரெயில் மோதி கல்லூரி மாணவர் சாவு

    • திருமங்கலம் அருகே ரெயில் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
    • தற்கொலையா? என போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சுங்குராம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் காளிதாஸ் (வயது 19). இவர் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கல்லூரியில் முதலா–மாண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காளிதாஸ் விரக்தியுடன் காணப்பட்டதாக கூறப்ப–டுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளிவில் காளிதாஸ் வெளியே சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பா–ர்த்தனர். ஆனால் பலனி–ல்ைல.

    இன்று காலை மறவன்குளம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் தண்டவாளத்தில் இறந்த கிடந்தது காளிதாஸ் என் தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×