search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன்-லேப்டாப் திருட்டு
    X

    செல்போன்-லேப்டாப் திருட்டு

    • மதுரை கடை வீதிகளில் செல்போன்-லேப்டாப் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கீழ வைத்திய நாதபுரத்தை சேர்ந்தவர் முத்து வழிவிட்டான். இவர் கே.வி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் செல்போன் மாயமானது. இதுகுறித்து செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடிய தத்தனேரி முருகன் மகன் கணேசன் (20), சரவணன் (19) ஆகியோரை கைது செய்தனர்.

    தேனி மாவட்டம் வதுவார்பட்டியைச் சேர்ந்த சுப்புக்காளை மகன் காளிதாஸ் (24). இவர் மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் செல்போனை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிர மணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடிய மாடக்குளம் மெயின் ரோடு சித்தன் என்ற வினோத்குமார் (34) என்பவரை கைது செய்தனர்.

    ஜெய்ஹிந்த்புரம், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த சேகர் மனைவி வள்ளி (24). இவரது வீட்டிலும் 2 செல்போன்கள் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×