என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அந்தியோதயா, இன்டர்சிட்டி ரெயில் போக்குவரத்து இன்று முதல் மாற்றம்
- அந்தியோதயா, இன்டர்சிட்டி ரெயில் போக்குவரத்து இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- நெல்லை- செங்குளம் இடையே இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகளும், வடக்கு பணகுடி ரெயில் நிலையத்தில் நடை மேம்பால வேலைகளும் நடக்கின்றன.
மதுரை
திருவனந்தபுரம் கோட்டத்தில் நெல்லை- செங்குளம் இடையே இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகளும், வடக்கு பணகுடி ரெயில் நிலையத்தில் நடை மேம்பால வேலைகளும் நடக்கின்றன. எனவே அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து இன்று (20-ம் தேதி) புறப்படும் நாகர்கோவில் ரெயில் மற்றும் தாம்பரம் -நாகர்கோவில் அந்தியோதயா ரெயில் (20691) ஆகியவை நெல்லை - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மறு மார்க்கத்தில் நாளை (21-ம் தேதி) நாகர்கோவிலில் இருந்து புறப்படும் தாம்பரம் ரெயில் மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரெயில் நாகர்கோவில்-நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல நாளை (21-ம் தேதி) மற்றும் 24-ம் தேதி ஆகிய 2 நாட்களில் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில்கள், இரு மார்க்கங்களிலும் நெல்லை - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்