search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோதலில் ஈடுபட்ட 2 பேர் கைது
    X

    மோதலில் ஈடுபட்ட 2 பேர் கைது

    • மோதலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 2 பேருக்கும் முன் விரோதம் உள்ளது.

    மதுரை

    பழங்காநத்தம், பசும்பொன் நகர், ஜீவா தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (60). இவரும் ராமலிங்க நகரை சேர்ந்த விக்னேஷ் குமார் (34) என்பவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வருகின்றனர். 2 பேருக்கும் முன் விரோதம் உள்ளது. நேற்று கந்தசாமி ராமலிங்க நகருக்கு வந்தார்.

    அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கந்தசாமிக்கு அடி, உதை விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக கந்தசாமி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் விக்னேஷ் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், சாமுவேல் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×