என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/08/21/1749515-123.gif)
வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வைரமணி, ஆத்தி குளம் வீரகார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
மதுரை
மதுரை மானகிரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அசோகன் (வயது 52). இவர் நேற்று காலை கோச்சா காம்ப்ளக்ஸ் பகுதிக்கு சென்றார். அப்போது அவரை நடுரோட்டில் வழிமறித்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.500-ஐ பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாக அசோகன் அண்ணாநகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் சம்பவம் பகுதியில் பொருத்தப்பட்டி ருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது அசோகனிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் பற்றிய விவரம் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த வைரமணி, ஆத்தி குளம் வீரகார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)