search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரும்பு கம்பி திருடியவர் கைது
    X

    இரும்பு கம்பி திருடியவர் கைது

    • இரும்பு கம்பி திருடியவர் கைது செய்யப்பட்டார்
    • பாலம் கட்டுமானப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதி காவல்சரகத்திற்கு உட்பட்ட எடையபட்டி புங்கம்பாடியை சேர்ந்தவர் கணபதி (வயது 47). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக கடவூர் அருழி எடையபட்டி சுருமாண்பட்டி சாலையில் பாலம் கட்டும் பணிக்கு கணபதி சென்று வந்து உள்ளார். இந்நிலையில் பாலம் கட்டுமானப் பணிகளுக்காக அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு கிளாம்புகள் மாயமாகி வந்து உள்ளது. இதனால் பாலம் கட்டுமான பணிகளில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த கரூர் பகுதியை சேர்ந்த ஜோதி பிரசன்னா என்பவர் அங்கு பணிகளுக்கு வந்த தொழிலாளர்களிடம் விசாரித்து உள்ளார். இதில் கணபதி மீது சந்தேகம் அடைந்த ஜோதி பிரசன்னா கணபதி வீட்டில் ஆய்வு செய்து உள்ளார். அப்போது மாயமான பாலம் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் 41 இரும்பு கிளாம்புகள் கணபதி வீட்டில் இருந்து எடுத்து உள்ளனர். இதனால் பாலவிடுதி காவல்நிலையத்தில் இரும்பு கிளாம்புகளுடன் ஜோதி பிரசன்னா புகார் அளித்தார். புகாரின் பேரில் கணபதி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×