என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- அகவிலை படியை முன் தேதியிட்டு வழங்க கோரி
கரூர்:
மத்திய அரசு அறிவித்தது போல் நடப்பாண்டு ஜன. 1-ந் தேதி முதல் 3 சதவீத அகவிலைப் படியை உடனே முன் தேதியிட்டு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட மையம் சார்பில், மாவட்ட தலைவர் சடையாண்டி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட மின்சாரத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜவஹர் சிறப்புரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர்கள் செல்லமுத்து, ராஜசேகரன், சங்கரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் முத்துக்கனி, ஜெயமூர்த்தி, மின்சாரத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் தங்கவேலு வரவேற்றார். மாவட்ட பொருளாளர் குப்புசமி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ காப்பீட்டு நிதி எந்தவித அறிவிப்பும் இன்றி கூடுதலாக ரூ.147 பிடித்தம் செய்வதையும், குடும்ப நல நிதி ரூ.70 கூடுதலாக பிடித்தம் செய்வதையும் உடனே நிறுத்தவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றிடவேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்