search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வயிற்று வலியால் மூதாட்டி தற்கொலை
    X

    வயிற்று வலியால் மூதாட்டி தற்கொலை

    சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்

    கரூர்,

    குளித்தலையை அடுத்த, ஆர். டி.மலை நாவல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராசம்மாள் (வயது 63). கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், மருத்துவர் ஆலோசனைப் படி, மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார். கடந்த ஒரு வாரமாக வயிற்று வலி தாங்க முடியாமல் மன விரக்தியில் இருந்த ராசம்மாள், விஷம் தின்று மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மணப்பாறையில் உள்ள தனியார் மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு ராசம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மகன் முத்துக்குமார் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×