search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் மது விற்றவர்கள் கைது
    X

    கரூரில் மது விற்றவர்கள் கைது

    • மது விற்றவர்கள் கைது செய்யபட்டுள்ளனர்
    • போலீசார், தோகைமலை, குளித்தலை, வாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கரூர்:

    கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார், தோகைமலை, குளித்தலை, வாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக மாரியாயி (வயது 42), கன்னியம்மாள் (62), காமராஜ் (52), கோபிநாத் (50), முருகேசன் (51) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 33 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





    Next Story
    ×