search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
    X

    வாலிபர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

    • வாலிபர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
    • மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

    கரூர்:

    குளித்தலை அருகே பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 3 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்த தீர்ப்பளித்தது.

    கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூரை சேர்ந்தவர் வடிவேல் (வயது30). இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 9-ந் தேதி அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து நச்சலூர் மேலநந்தவனக்காட்டை சேர்ந்த வேலு என்ற வேலுசாமி (38), நச்சலூர் விஆர்ஓ காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் (35), நச்சலூர் தாட்கோ காலனியைச் சேர்ந்த சங்கர் (24) ஆகிய 3 பேர் வடிவேலுவிடம் விசாரித்து அவரை ஆபாசமாக திட்டி, கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர் இதில் வடிவேலு படுகாயமடைந்துள்ளார்.

    இதையடுத்து இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கவேண்டாம். நாங்களே அவருக்கு சிகிச்சை அளிக்கிறோம் என வடிவேலு குடும்பனத்தினரிடம் கூறிவிட்டு மேற்கண்ட 3 பேரும் அவரை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விபத்தில் காயமடைந்ததாகக்கூறி சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் வடிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர். கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று வழங்கிய தீர்ப்பில், வடிவேலுவை ஆபாசமாக திட்டியதற்காக 3 பேருக்கும் 15 நாள் சிறைத்தண்டனை, ரூ.100 அபராதம் அதை கட்டத்தவறினால் 7 நாள் சிறையும், கொலை செய்த குற்றத்திற்காக 3 பேருக்கும் தலா ஒரு ஆயுள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம், அதை கட்டத்தவறினால் மேலும் ஒராண்டு சிறை, அடித்து காயப்படுத்திவிட்டு அதனை விபத்தில் சிக்கி காயமடைந்ததாகக்கூறி தடயத்தை மறைத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.1,000 அபராதம் அதனை கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×