search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா
    X

    கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா

    • கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
    • பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தவேண்டும்

    கரூர்:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி கரூரில் அரசு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகைள வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் கரூர் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது. மாநிலத் துணைத்தலைவர் மு.செல்வராணி தர்ணா தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச்செயலாளர் கெ.சக்திவேல் கோரிக்கை விளக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகேசன் உள்ளிட்டோர். நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×