என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மது பாட்டில்கள் கடத்திய மூதாட்டி கைது
- மது பாட்டில்கள் கடத்திய மூதாட்டி கைது செய்யப்பட்டார்
- போலீசார் நடவடிக்கை
கரூர்:
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தை சுற்றி 5க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் மது பாட்டில்களை வாங்கிய ஒரு மூதாட்டி அரிசி சாக்குகளில் வைத்து கட்டி, கரூரிலிருந்து மகாதானபுரம் செல்லும் தனியார் பேருந்தில் சென்றார்.இதனை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் திண்ணப்பா நகர் கார்னர் பகுதியில் நின்ற மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அந்த வழியாக வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மதுபான பாட்டில்கள் அடங்கிய 5 சாக்கு மூட்டைகள். ஒரு சாக்குப் பை இருந்தது. அவற்றை பேருந்திலிருந்து கீழே இறக்கிய போலீசார் அதனை கடத்தி வந்த மூதாட்டியையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் டாஸ்மார்க் மதுபான கடைகளில் இருந்து வாங்கிய 247 குவாட்டர் பாட்டில்களையும், 12 பீர் பாட்டில்களையும் எடுத்து வந்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அந்த மூதாட் டியை கைது செய்த மது விலக்கு அமலாக்க துறை போலீசார் அவர் பேருந்தில் கடத்தி வந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத் துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்