என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
- போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க கோரி நடந்தது
கரூர்
கரூர் மாவட்ட சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வெண்ணைமலை தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலையின்மை, விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நலவாரிய உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளர் நலன் கருதி 36-வது வாரிய கூட்டத்தில் எடுத்த முடிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும், பென்ஷன் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், பெண் தொழிலாளருக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும், கரூர் மாவட்ட நல வாரிய அலுவலகத்தில் தேங்கியுள்ள பணப்பயன் மனுக்களை விரைந்து பரிசீலித்து பண பழங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்