search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
    X

    பச்சியப்பன் கொட்டாய் கிராமத்தில் தி.மு.க.வினர் மறைந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சி.

    கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

    • கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பச்சியப்பன் கொட்டாய் கிராமத்தில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு பச்சியப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்த தி.மு.க கிளைச் செயலாளர் மாதன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×