என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுக்கடை அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே இனயம் பகுதி தோப்புவிளை யைச் சேர்ந்தவர் வினித் குமார் (வயது 37), தொழிலாளி.
இவரது மனைவி சாந்தி (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள னர். சம்பவத்தன்று சாந்தி தனது மகள்களுடன் தாய் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார்.
அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. மனைவி மற்றும் மகள்களை வினித் குமார் பல இடங் களிலும் தேடிப் பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்க வில்லை. மேலும் சாந்தியின் செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக வினீத் குமார் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் சேசு ராஜசேகர் சப்-இன்ஸ்பெக்டர் சுகு மாரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகள்களுடன் மாயமான சாந்தி எங்கே சென்றார்?, அவர்களை யாராவது கடத்தி இருக்கலாமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்