search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் உலக சுற்றுச் சூழல் தின விழா
    X

    ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் உலக சுற்றுச் சூழல் தின விழா

    • மாணவ மாணவிகள் சுற்றுச் சூழல் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • தேரூர் பேரூராட்சி தலைவி சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    நாகர்கோவில்:

    ரோஜாவனம் பாரா மெடிக்கல் சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர் கல்லூரி ஸ்கவுட் ரோவர்ஸ் அமைப்பு மற்றும் தேரூர் பேரூராட்சியும் இணைந்து உலக சுற்றுச் சூழல் தின விழாவை நடத்தினர்.

    கல்லூரி துணைத் தலைவர் அருள் ஜோதி தலைமையில் கல்லூரி முதல்வர் டாக்டர் லியாகத் அலி மற்றும் புனிதா டேனியல் முன்னிலை வகித்தனர்.

    தேரூர் பேரூராட்சி தலைவி அமுதா ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    சுற்றுச் சூழல் குறித்து கல்லூரி துணைத் தலைவர். அருள் ஜோதி பேசுகையில், தொழில் நுட்ப, தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது என்றும் ரசாயனக்கழிவுகள் புகை போன்றவை நீர் நிலைகள், வளிமண்டலம் போன்ற வற்றை மாசுபடுத்துவதோடு உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது மிக முக்கியம் எனவும் பேசினார்.

    மாணவ மாணவிகள் சுற்றுச் சூழல் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லூரி பேராசிரியர் அய்யப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக மாணவர் பெஞ்சமின் வரவேற்புரையாற்ற மாணவி சிக்லின் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகர் சாந்தி, திட்ட மேலாளர் சில்வெஸ்டர், ஆவண அலுவலர் ஜியோ பிரகாஷ் மேலாளர்கள் கோபி மற்றும் நிதி மேலாளர் சேது.கல்லூரி பேராசிரியர்கள் துரைராஜ். சிவதாணு, பகவதி பெருமாள், மரிய ஜாண், சாம்ஜெபா, லிட்வின் லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி. அலுவலக செயலர் சுஜின், கண்காணிப்பாளர் ஆறுமுகம், ஜாண் டிக்சன், பெபின். ஜெனில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×