search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
    X

    திருவட்டார் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    • சர்க்கரை நோய் குறையாததால் பெரிதும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்
    • சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேவதாஸ் நேற்று மரணம்அடைந்தார்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே கேசவபுரம், திருவரம்பு பகு தியை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது67) இவரு க்கு மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடித்து தனியாக வசித்து வருகிறார்கள்.

    தேவதாஸ் சர்க்கரை நோயால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இவருடைய 2 கண்களும் பார்வை குறைந்து வந்தது. அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சர்க்கரை நோய் குறையாததால் பெரிதும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தேவ தாஸ் விஷம்குடித்து மயங்கிய நிலையில் வாயில் நுரை தள்ளியபடி படுத்து இருந்தார். இதனை பார்த்த மனைவி, மகனுக்கு தகவல் கொடுத்தார்.

    மகனும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேவதாசை மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சை க்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேவதாஸ் நேற்று மரணம்அடைந்தார்.

    தேவதாஸ் மனைவி ராஜம் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    Next Story
    ×