search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகள் பேரணி
    X

    சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகள் பேரணி

    • சரிவிகித உணவு உண்டு ஆரோக்கியமாக நோயற்ற வாழ்வு வாழ வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.
    • கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து உணவு திருவிழாவை நடத்தி வருகிறது.

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் 75- வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து உணவு திருவிழாவை நடத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் இன்று நடந்த பேரணியில் மாணவ- மாணவிகள் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாராதமாதா வேடமணிந்து பங்கேற்றனர். குறைவான சர்க்கரை, குறைவான உப்பு, குறைவான கொழுப்பு என்ற உணவு மந்திரத்தை கடைபிடித்து சரியான உணவு, சரிவிகித உணவு உண்டு ஆரோக்கியமாக நோயற்ற வாழ்வு வாழ வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.

    மாணவ -மாணவிகள், நடை பயிற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இதில் பங்கேற்றனர். பேரணி யின் தொடக்க விழா கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

    நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் கொடிஅசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தஞ்சை சிவம், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.செந்தில் குமார், வட்டார உணவு பாதுகாப்பு அலுவ லர் குமார பாண்டியன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா உள்பட பலர்கலந்து கொண்டனர். கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த பெருநடை பேரணி காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, சிலுவைநகர், கோவளம் ரோடு வழியாக கன்னியாகுமரி நான்கு வழி சாலை முடியும் சீரோ பாயிண்டில் நிறை வடைந்தது.

    Next Story
    ×