என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் கடை-குடோனில் பதுக்கிய 200 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது
- குட்கா பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருவதாலும் மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிப்பு
- குமரி-கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருவதாலும் மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதாலும் அதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரி-கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
போதைப் பொரு ட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருபவர்களை போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர ராஜ், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு பிரபல மொத்த விற்பனை கடை மற்றும் குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு மூட்டை மூட்டையாக 200 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார், அங்கு பணியில் இருந்த மார்த்தாண்டத்தையடுத்த நெல்வேலி ஓச்சவிளையை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 49), வீயன்னூர் செவரக்கோட்டை முருக தாஸ் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்