என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து
- முகம், நெற்றி, தாடை, கை ஆகிய இடங்களில் கத்தியால் வெட்டினர்
- தாக்கிய கும்பல் கொலை மிரட்டல்
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட காட்டுவிளையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் (32) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சதீஷ்குமார் வீட்டின் அருகாமையில் நின்று கொண்டிருந்தபோது குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜு (62), சீமா (33) ஆகியோர் தடுத்து நிறுத்தி முகம், நெற்றி, தாடை, கை ஆகிய இடங்களில் கத்தியால் வெட்டி காயப்படுத்தி உள்ளனர்.
சதீஷ்குமார் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்ததும், தாக்கிய கும்பல் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்