search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே புது மாப்பிள்ளை விபத்தில் பலி
    X

    தக்கலை அருகே புது மாப்பிள்ளை விபத்தில் பலி

    • விக்டர்ஜோஸ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • தக்கலை அருகே பட்டாணிகுளம் வந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது, கார் ஓட்டி வந்த விக்டர் ஜோஸ் சம்பவ இடத்திலே பலியானார்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள பனவிளை பகுதியை சேர்ந்தவர் விக்டர்ஜோஸ் (வயது 36 ). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் தற்போது புலியூர்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு விக்டர் ஜோஸ் தனது நண்பர் சோபனுடன் தக்கலை அருகே பெருஞ்சிலம்பு சென்றுவிட்டு காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தக்கலை அருகே பட்டாணிகுளம் வந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது, கார் ஓட்டி வந்த விக்டர் ஜோஸ் சம்பவ இடத்திலே பலியானார். பின் இருக்கையில் அமர்ந்து இருந்த சோபன் லேசான காயத்துடன் தப்பினார். இது சம்பந்தமாக பஸ் டிரைவர் ரவீந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×