search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி கடலில் படகுமூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
    X

    கன்னியாகுமரி கடலில் படகுமூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

    • 48 கடற்கரை கிராமங்களில் ரோந்து பணி தீவிரம்
    • தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க ஒத்திகை

    கன்னியாகுமரி :

    தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் கடலோர பகு தியில் உள்ள மாவட்டங்கள் ஆகும். இதனால் இந்த மாவட்டங்களில் கடல் வழியாக படகு மூலம் தீவிரவாதிகள் ஊடுரு வலை தடுக்க ஆண்டுதோறும் கடலில் படகுமூலம் போலீ சார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார் இந்திய கடலோர காவல் படை இந்திய கடற்படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணை ந்து தமிழகத்தின் கடலோர பகுதியில் "சாகர்கவாச் ஆப ரேஷன்"என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினார்கள். அதன்படி கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீ சார் 2 அதிநவீன ரோந்து படகுமூலம் பாது காப்பு ஒத்திகையில் ஈடுப ட்டனர்.

    கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் அவர்கள் பாது காப்பு ஒத்திகையில் ஈடுப ட்டனர். சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் கடல் பகுதிவரை ஒரு ஒரு குழுவினர் அதிநவீன ரோந்து படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அதேபோல இன்னொரு குழுவினர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குளச்சல் கடல் பகுதி வரை க்கும் அதிநவீன படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை யிலான 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர்.

    மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீ சார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்க ணித்தனர். நெல்லை, குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். அதேபோல லா ட்ஜ்களிலும் சந்தேகப்ப டும்ப டியான நபர்கள் யாரா வது தங்கி இருக்கிறார்களா? என்று உள்ளூர் போலீசாரும் தீவிர சோதனை நடத்தினார்கள்.

    Next Story
    ×