search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து டிபன் கடை எரிந்தது
    X

    குலசேகரம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து டிபன் கடை எரிந்தது

    • சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.
    • டிபன் கடைக்கு எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே கல்லடிமாமூடு பகுதியில் சாலையோர டிபன்கடை நடத்தி வருபவர் ஜாண். இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். தினமும் காலை, மாலை வேளைகளில் டிபன் விற்பனை செய்துவந்தார். இரவு 10 மணிவரை தினமும் கடை திறந்து இருக்கும். இதன் எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    நேற்று மாலை டிபன் கடை நடத்தி கொண்டு இருக்கும்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து திடீரென கியாஸ் கசிந்து தீ பிடித்தது. இதில் கடைமுழுவதும் தீயில் கருகியது. அங்கு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். அந்த பகுதி பொதுமக்களும், ரோட்டில் நடந்து சென்றவர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் உடனே குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். டிபன் கடையின் மேற்கூரை இரும்பு தகடுகளால் மாட்டப்பட்டு இருந்தது இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.

    Next Story
    ×