search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் கொலை - அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க 2 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
    X

    உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் கொலை - அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க 2 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

    • போலீசார் தேடுவதை அறிந்த ஸ்டான்லி தலை மறைவாகிவிட்டார்
    • தலைமறைவான ஸ்டான் லியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    அருமனை அருகே உள்ள மலைக்கோடு குடுக்கச்சி விளை பகுதியைச் சேர்ந்த வர் தாஸ் (வயது 56) தி.மு.க. பிரமுகர் மலைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி (50) அ.தி.மு.க. பிரமுகர்.

    இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்றும் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்டான்லி, தாசை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி தாஸ் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    படுகாயம் அடைந்த தாசை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி தாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அருமனை போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.தாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.

    ஸ்டான்லி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து போலீசார் ஸ்டான்லியை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டனர்.போலீசார் தேடுவதை அறிந்த ஸ்டான்லி தலை மறைவாகிவிட்டார். தலைமறைவான ஸ்டான் லியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.பலியான தாசின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    Next Story
    ×