என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காமராஜரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
- கொல்லங்கோடு அருகே ஊரம்பு சந்திப்பில் நடந்தது
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அழைப்பு
கன்னியாகுமரி :
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கொல்லங்கோடு அருகே ஊரம்பு சந்திப்பில் வைத்து எனது தலைமையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
விஜய்வசந்த் எம்.பி., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால்சிங், கேரளா மாநில பொதுச்செய லாளரும், பேச்சாளருமான மரியாபுரம் ஸ்ரீகுமார், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை நிலைய பேச்சாளர் கவிஞர் அப்பச்சி சபாபதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். பொதுக்கூட்டத்திற்கு பேரூ ராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட, வட்டார நிர்வாகிகள், மற்றும் துணை அமைப்புகளின் மாவட்ட, வட்டார தலைவர்கள், நிர்வாகி கள், காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூ ராட்சி, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனை வரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்