search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் 20-ந் தேதி முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்
    X

    நாகர்கோவிலில் 20-ந் தேதி முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்

      நாகர்கோவில்:

      தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அனைத்து பள்ளி மேலாண்மைகளின் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

      தமிழக அரசானது அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி இட ஒதுக்கீடு களையும், அரசு பள்ளி மாணவி களுக்கு அறி விக்கப்பட்டுள்ள ரூ.1000 உயர்கல்வி ஊக்கத்தொகை, காலை சிற்றுண்டி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து நல திட்டங்களையும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.

      மாணவர் எண்ணிக் கைக்கு கேற்ப அரசு அனுமதித்த காலி பணி யிடங்களில் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் பெற்ற ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நியமன நாள் முதல் ஊதியம் வழங்கிட வேண்டும்.

      அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியிட நிர்ணயம், ஆங்கில வழி இணை பிரிவு பணி நிரவல் நியமன ஏற்பளிப்பு ஆகியவற்றை முழுமையாக செயல்படுத்த வேண்டும். 1991-க்கு பின்னர் தொடங்கப்பட்ட அல்லது தரம் உயர்த்தப்பட்ட தமிழ் வழி பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு, கன்னியாகுமரி மாவட்ட அனைத்து பள்ளி மேலாண்மைகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற 20-ந்தேதி பேரணி புறப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

      இவ்வாறு அவர் கூறினார்.

      குழித்துறை மறை மாவட்ட பள்ளிகள் கூட்டாண்மை மேலாளர் கலிஸ்டஸ், சிஎஸ்ஐ கூட்டு மேலாண்மை பள்ளிகள் கூட்டு மேலாளர் கிரிஸ்டோபர் இயேசு மணி, இயக்க மாநில துணைத்தலைவர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

      Next Story
      ×