search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டாரில் மீன் வாங்க வருபவர்களை வெட்டுவேன் மீன் வியாபாரி மிரட்டல்
    X

    திருவட்டாரில் மீன் வாங்க வருபவர்களை வெட்டுவேன் மீன் வியாபாரி மிரட்டல்

    • சமூக வலைதளங்களில் வீடியோ வைரலால் பரபரப்பு
    • திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சி க்கு ட்பட்ட திருவட்டார் பாலத்தின் அருகில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மீன் சந்தை தினமும் காலை 8 மணி முதல் செயல்பட தொடங்கி மதியம் 12 மணி வரை செயல்படும். இத னால் காலையில் மிகவும் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும்.

    மீன் சந்தையின் அருகில் அரசு மதுபானகடை செயல்பட்டு வருகிறது. அரசு மதுபான கடை 12 மணிக்கு தான் செயல்படும். ஆனால் இரவில் கடையில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி அதிகாலை முதல் மறைமுகமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அதிகாலை முதல் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

    மீன் சந்தை வளாகத்தில் அதிகாலை முலே மதுவிற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்நி லையில் இங்கு மீன் வாங்க வந்த பொதுமக்களிடம் மீன் வியாபாரி ஒருவர் மதுபோதையில் மீன் வெட்டும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். 'மீன் வாங்க வந்தால் வெட்டுவேன் என கத்தியை காட்டி அவர் கூறியது மீனையா?, ஆளையா? என்பது தான் தெரிய வில்லை என பொதுமக்கள் கூறி சென்றனர். இந்த காட்சிகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் மொபைல் போனில் படம் பிடித்தனர். தொடர்ந்து அந்த காட்சிகள் சமூக வலைத ளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து தகவலறிந்த திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×