search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளம் சுனாமி காலனியில் தூக்கு போட்டு மீனவர் தற்கொலை
    X

    பள்ளம் சுனாமி காலனியில் தூக்கு போட்டு மீனவர் தற்கொலை

    • வீட்டின் ஒரு அறையில் அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி
    • சுசீந்திரம் போலீசில், செல்வராஜின் மனைவி புகார் செய்தார்.

    கன்னியாகுமரி :

    சுசீந்திரத்தை அடுத்த பள்ளம் சுனாமி காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58), மீன்பிடி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. நேற்று காலை திருமணமாகாத மகள், தனது தாயாருடன் தேவாலயம் சென்று விட்டார். வீட்டில் செல்வராஜ் மட்டும் தனியாக இருந்தார்.

    சிறிது நேரம் கழித்து அவரது மனைவியும் மகளும் தேவாலயத்தில் இருந்து வீடு திரும்பினர். அவர்கள் செல்வராஜை தேடிய போது காணவில்லை. இந்த நிலையில் வீட்டின் ஒரு அறையில் அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து சுசீந்திரம் போலீசில், செல்வராஜின் மனைவி புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×